நீலகிரி, ஜன.29- உதகையில் தொடரும் உறை பனி யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம் பர், டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி மாதம் வரை உறைபனி யின் தாக்கம் காணப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுவதும், ஜனவரி மாதம் முதல்வாரம் வரையில் வடகி ழக்கு பருவமழை பொழிவு இருந்து வந்தது. இதனால் உறைப்பணியின் தாக்கம் தாமதமாக துவங்கியது. கடந்த சில நாட்களாக உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.8 டிகிரி செல்சியஸூம், தலைகுந்தா பகுதியில் 0 டிகிரி செல்சியஸூம் வெப் ்பநிலை பதிவாகியுள்ளது. உதகை நகரில் பெய்த கடும் உறை பனி காரணமாக திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பணி போர்வை போர்த்தியது போல காட்சிய ளிக்கிறது. இதேபோன்று புல்வெளி களில் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று உள்ளது. உதகையில், காந்தல், தலைக்குந்தா, ஹெச்பி எப், லவ்டேல் உள்ளிட்ட பகுதிகளில் உறை பனி அதிகரித்து காணப்படுகிறது. உறை பனி காரணமாக தேயிலை பறிக்கும் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது. தொழிலாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதே போன்று மலை காய்கறிகள் அறுவடை களும் பாதிக்கப்பட்டுள்ளது. பணீயின் தாக்கத்தால் பயிர்கள் கருகி வருவதும் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. அதிகாலை நேரத்தில் விவசாயப் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் வரும் நாட்கள் இன்னும் உதகை மக்க ளுக்கு சவாலானதாகவே காணப்படும் என்கின்றனர் அப்பகுதியினர்.