பென்னாகரம், ஜூலை 24- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதன்காரணமாக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்துவிடப் பட்டது. இந்த நீரானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஒரு லட்சம் கன அடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதி கரித்து வந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை யின் அளவு குறைந்தாதன் காரணமாக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு நேற்று இரு அணைகளில் இருந்தும் 35 ஆயிரத்து 323 கனஅடியாக குறைத்து வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்பட்டது- இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுபில் சனியன்று 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 32 ஆயி ரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசலில் செல்லவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்க ளில் குறிக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 14 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.