பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்
உதகை, ஜூன் 12- இதமான கால நிலையால் பசுந்தேயிலை மகசூல் வெகு வாக அதிகரித்து உள்ளால், அதை அறுவடை செய்யும் பணி யில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவ சாயம் உள்ளது. இங்கு, சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்ப ளவில் தேயிலைகளை விவசாயிகள் பயிரிட்டு அதை பரா மரித்து வருகின்றனர். இந்நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன், போதிய சூரிய வெளிச்சத்துடன், இதமான கால நிலை நிலவி வருகிறது.
இதனால், பசுந்தேயிலை மகசூல் வெகுவாக அதிக ரித்து வருகிறது. இருப்பினும், தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத னால், பெரிய அளவில் தேயிலைத்தோட்டம் வைத்துள்ள விவ சாயிகள், பேட்டரியால் இயங்கும் நவீன அறுவடை இயந்தி ரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். சில விவசாயிகள் கை அறுவடை இயந்திரங்கள் மூலமாக தங்க ளது தோட்டங்களில் வளர்ந்துள்ள பசுந்தேயிலை கொழுந்து களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூன் 12- உதகை செல்லும் ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி வாகன ஓட்டி களை அங்குள்ள வாடகை வாகன ஓட்டிகள் அச்சுறுத்தல் செய் வதாக குற்றம்சாட்டி கோவையில் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் இருந்து செல்லும் ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி வாகனங்கள் உதகையில் உள்ளூர் சவாரி மேற் கொள்கின்றனர். இதனால், உதகையில் உள்ள வாடகை வாகன ஓட்டிகள் வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது. இத னையடுத்து, உதகையில் உள்ள வாடகை வாகன ஓட்டிகள் கோவையில் இருந்து செல்லும் ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி வாகன ஓட்டுநர்களிடம் மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவையில் இருந்து உதகை செல்லும் ரெட் டாக்ஸி மற்றும் கோ டாக்ஸி நான்கு சக்கர வாகனங் களை உதகையில் உள்ள சுற்றுலா ஓட்டுநர் சங்கத்தினர் மிட் டரை உடைப்பதும், ரெட் டாக்ஸி ஸ்டிக்கர்களை கிழிப்ப தும் அட்டூழியம் செய்து வருவதாக ரெட் டாக்ஸி ஓட்டு நர்கள் தெரிவித்து உள்ளனர். அதே போல கோவையில் இருந்து உதகைக்கு டிராப் செய்தால் அது மட்டுமே செய்ய வேண்டும். உதகையில் இருந்து நீங்கள் பிக் அப் எதையும் செய்யக் கூடாது என கூறியதால் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இப்பிரச்சனையில் கோவை மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மின்தடை
ஈரோடு, ஜுன் 12- பெருந்துறை கோட்டத் தைச் சார்ந்த பெரியாண்டி பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்புப்பணி வியாழனன்று செயல்படுத்தப்படுகிறது.இதனால் ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபு தூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளை யாம்பாளையம், துளுக்கம் பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக் காது.
அணைகள் நிலவரம்
சோலையார் அணை
நீர்மட்டம்:53.94/160 அடி
நீர்வரத்து:540.48கனஅடி
நீர்திறப்பு: 20 கனஅடி
மழை அளவு: 7 மி.மீ
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்: 12.80/72 அடி