districts

img

பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரிப்பு

சேலம், பிப்.19- சேலம் மாவட்டத்தில் பெண் கள், குழந்தைகள் மற்றும் மாணவி கள் மீது தொடர்ச்சியான வன் கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். சேலம் மாவட்டத்தில் பெண் கள், குழந்தைகள் மற்றும் மாணவி கள் மீதான வன்கொடுமை நிகழ்வு கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரு கிறது. குறிப்பாக, அரசுப்பள்ளிக ளில் மாணவிகள் மீதான வன் கொடுமைகள் அதிகரித்துள்ளது. அண்மையில் மல்லிகுந்தம், ஏற் காடு, கருமந்துறை, எடப்பாடி, கொங்கணாபுரம், ஓமலூர் ஆகிய  பகுதிகளிலுள்ள பள்ளி மாணவிக ளிடம் பாலியல் அத்துமீறல் நடந் துள்ளது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விஷயத்தில் அரசு கூடுதல் கவனம்  செலுத்த வேண்டும். காவல் துறை யினர் இதுபோன்ற பிரச்சனைக ளில் உடனடி தீர்வு கண்டு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். பல காவல் நிலையங்களில் புகார ளித்தும் நடவடிக்கை எடுக்காத சூழல் மூலம், காவல் துறை மெத் தனப் போக்குடன் செயல்படுவதாக  தெரிகிறது. எனவே, பெண்கள் மற் றும் பெண் குழந்தைகளுக்கு எதி ராக நடைபெறும் குற்றங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி குற்றவா ளிகளுக்கு கடுமையான தண்டனை  வழங்க நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். மேலும், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்கள் போதைக் கலாச்சாரத்தால் நடைபெறுகிறது. கஞ்சா, போதை மாத்திரை, மது,  குட்கா போன்ற போதைப் பொருட் களின் பயன்பாட்டை தடுக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்,  என வலியுறுத்தி இந்திய மாணவர்  சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம், அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தினர் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில், மாதர் சங்க மாநிலக்குழு உறுப் பினர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்டச்  செயலாளர் எஸ்.எம்.தேவி, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் பெரி யசாமி, மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் பவித்ரன், நிர்வாகிகள் கோகுல், டார்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.