districts

img

கிளைகோஸ் காய்கறிகளின் விலை உயர்வு

உதகை, டிச.27- நீலகிரி மாவட்டத்தில் விளையும் கிளைகோஸ் காய்கறி கிலோ ரூ.550-க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடி யாக காய்கறிகள் விவசாயம் பெருமளவில் நடந்து வருகிறது.  அதில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட ஆங்கிலேயர்களால் அறி முகப்படுத்தப்பட்ட காய்கறிகள் விளைச்சல் ஒரு புறம்  இருந்தாலும், சைனீஸ் ரக காய்கறிகளை உற்பத்தி செய்வ திலும் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வரு கின்றனர். இதன்படி உதகை சுற்று வட்டார பகுதிகளான கோடப்பமந்து, தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல் தொரை, ஒரநள்ளி, கேத்தி மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளான சுகுணி, ரெட்  கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, செல்லரி, லெட் யூஸ், ஸ்பிரிங் ஆனியன் போன்றவைகள் விளைவிக்கப்படு கின்றன. இந்த வகை காய்கறிகள் சென்னை, பெங்களூரு, மும்பை, உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல் களில் நூடுல்ஸ், சூப், பர்கர் மற்றும் துரித உணவுகள் தயாரிக்க  பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அசைவ பிரியர்களுக்கு மீன், ஆட்டுக்கறி இருப்பதைப் போல, சைவப் பிரியர் களுக்கு இந்த மாதிரியான காய்கறிகள் அசைவ உணவு களை போல் சுவை தருவதாக கூறப்படுகிறது. நீலகிரியில் விளைவிக்கக்கூடிய சைனீஸ் காய்கறிகள்  ஒவ்வொரு நாளும் காலையில் உதகை மார்க்கெட்டில் ஏலம்  விடப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு காரணமாக தற்போது சைனீஸ்  காய்கறிகளுக்கு தேவை அதிகரித்து உள்ளது. சைவ பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய சூப், குழம்பு உள்ளிட்ட பல்வேறு உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் “ஸ்ப்ரவுட்” எனப்படும் “கிளை கோஸ்” கிலோ ஒன்று ரூ.650க்கு விற்பனையானது.

சாதாரண நாட்களில் ரூ.100  முதல் 150 வரை விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சாதாரண நாட்களில் ரூ.10 வரை விற்பனை யாகி வந்த சுகுணி காய் தற்போது ரூ.50 வரை விலை  உயர்ந்துள்ளது. ரூ.100 வரை விற்பனையாகி வந்த  புரூக்கோலி தற்போது ரூ.220க்கும், ரூ.40க்கு விற்பனையான  லீக்ஸ் ரூ.80 என வரையும் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து உதகை மார்க்கெட்டில் கிளை கோஸ் பயி ரிட்ட விவசாயிகள் கூறுகையில், எப்போதும் கிறிஸ்மதுஸ் மற்றும் புத்தாண்டு சமயத்தில் நல்ல விலை கிடைக்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கிலோ ரூ.650 தாண்டியுள்ளது. இந்த பயிர்களை குறைந்த  அளவிலான விவசாயிகளே சாகுபடி செய்து உள்ளனர். ஜனவரி வரை விலை உயர்வு இருக்கும், என்றனர். தோட்டக் கலை துறை அதிகாரி ஷிப்லா மேரி கூறுகையில், கிளை கோஸ் காய்கறியை பொறுத்தவரை கேரட் மாதிரி ஏக்கர் கணக்கில் பயிரிடப்படுவது கிடையாது. 10 செண்டு அல்லது  20 சென்ட் என்று அளவாக பயிரிடுகின்றனர். நீலகிரி  மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமே சுமார் 20  ஹெக்டேர் வரை மட்டுமே கிளைகோஸ் பயிரிடப்பட் டுள்ளது. இதனால் உற்பத்தி குறைந்ததால் தேவை ஏற்பட்டு  விலை அதிகரித்துள்ளது, என்றார்.