districts

img

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, அக்.11- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரண மாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த தால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக் கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகே னக்கல் காவிரியில் திங்களன்று காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 10  ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர் மழை யால் நீர்வரத்து படிப்படியாக அதிக ரித்து செவ்வாய்க்கிழமை காலை  8 மணி நிலவரப்படி காவிரியில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக  நீர்வரத்து 9.30 மணியளவில் 35  ஆயிரம் கனஅடியாக அதிக ரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் பெருகெடுத்து செல்கிறது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. இதனால் காவிரியில் பரிசல்  இயக்கவும், அருவிகளில் குளிக் கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் செவ்வாயன்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர்.  இதேபோல், மேட்டூர் அணைக் கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அணைக்கு திங்களன்று காலை 11,038 கனஅடியாக இருந்த நீர் வரத்து மாலையில் 9,644 கனஅடி யாக சரிந்தது. இரவு பெய்த மழை யின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 20,626 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத் திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால் வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 900 கனஅடி யிலிருந்து 750 கனஅடியாக குறைக் கப்பட்டுள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்ப தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118.71 அடியிலிருந்து 119.40  அடியாக உயர்ந்துள்ளது. அணை யின் நீர் இருப்பு 92.51 டிஎம்சியாக உள்ளது.  மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும்  வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணை  நீர்மட்டம் 120 அடியை நெருங்குவ தால் பொதுப்பணித்துறை அதிகா ரிகள், பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள  வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு உள ளனர்.