நாமக்கல், அக்.11- நூறுநாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண் டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஆண் டுக்கு 200 நாள் வேலை, தினக் கூலி ரூ.600 வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் அடிப் படை வசதிகளான நிழற்கூடம், மருத் துவவசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். வேலை செய்து முடித்த தொழிலாளர்க ளுக்கு சம்பள பாக்கியை உடன டியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வி வசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அதன்படி பல் லக்காபாளையத்தில் ஒன்றியப் பொருளாளர் கோவிந்தசாமி தலை மையிலும், குமாரபாளையத்தில் ஒன் றியச் செயலாளர் குருசாமி தலை மையிலும், தட்டாங்குட்டை ஊராட் சியில் பி.குமார் தலைமையிலும், வெப்படை நால் ரோட்டில் ஒன்றியத் தலைவர் வி.சண்முகம் தலைமையி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சி.துரைசாமி, ஒன்றிய துணைத் தலைவர் எம்.நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நாமகிரிப்பேட்டையில் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பி.செல்வ ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி, தொப் பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்பண்ணன், சண்முகம், சின்னத் தாயி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். தருமபுரி 100 நாள் வேலை திட்டத்தை சீர ழிக்கும் ஒன்றிய மோடி அரசை கண் டித்து, தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் ்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் எம்.முத்து, மாநி லக்குழு உறுப்பினர்கள் இ.கே.முரு கன், ஜி.பாண்டியம்மாள், மாவட்ட துணைச்செயலாளர்கள் சி.ராஜா, எம்.செல்வம், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.வெங்கடாச்ச லம், பி.கிருஷ்ணவேணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தீ.மாரியப்பன், கே.குமரேசன், டி.ஜடையாண்டி, பி.வீரப்பன், கே.எல்லப்பன், எம். தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
கோவை இதேபோன்று கோவை மாவட் டம், ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.முத்துச்சாமி தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஏ.துரைசாமி, மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். பரமசிவம் உட்பட திரளான விவ சாய தொழிலாளர்கள் கலந்து கொண் டனர். முடிவில், ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.ராமலிங்கம் நன்றி கூறினார். பெரியநாயக்கன்பாளை யம் அருகே உள்ள சோமையம்பா ளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு கே.வி.தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர் சங்க துணைத் தலைவர் செல்வராஜ், ஊராட்சி கவுன் சிலர் எம்.லட்சுமி மோகன்ராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். மோகன்ராஜ், வடக்கு பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் கேசவமணி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.