districts

திருப்பூரில் தொடர் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருப்பூர், டிச.12- திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழனன்று காலை முதல்  மாலை வரை தொடர் மழை பொய்த்த தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்க ளில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்திருந்தது. இந்நிலை யில், வியாழனன்று திருப்பூர் மாவட்டத் தில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. பெருமாநல் லூர், கணக்கம்பாளையம், போயம்பா ளையம், புதிய பேருந்து நிலையம், ராய புரம்,  வீரபாண்டி,  மன்னரை,  ஆண்டிபா ளையம்,  கருவம்பாளையம், பாளை யக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும், ஊர கப்பகுதிகளான உடுமலை,  மடத்துக்கு ளம், காங்கேயம், அவிநாசி உள்ளிட்ட  பகுதிகளிலும் மழை பெய்தது. அரசு  மற்றும் தனியார் பள்ளிகளில் அரை யாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவ தால் விடுமுறை விடப்படவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் நனைந் தபடியே பள்ளிகளுக்கு வந்து சென்ற னர். மேலும், குண்டும் குழியுமாக உள்ள  பிஎன் சாலையில் மழை நீருடன் கழிவுநீர்  சேர்ந்து சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளா கினர். இதனால் பொதுமக்கள் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: வானிலை மையம் திருப்பூரில் இன் றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. எனவே உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி  மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவி லுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல  அனுமதி இல்லை என நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளனர்.