கோவை, மார்ச் 5- சூலூர் அருகே கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபா ளையத்தில் சுகாதார வளாகம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத் தார். கோவை மாவட்டம், சூலூர் அருகே கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையத்தில் பொதுமக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் ஊராட்சி பொது நிதி ஆகிய திட்டங்களின் மூலம் சுகாதார வளாகம் 15.4 லட்சம் ரூபாய் செலவிலும், அங்கன்வாடி கட்டிடம் 11.97 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வு செவ்வாயன்று நடைபெற் றது. கணியர் ஊராட்சி தலைவர் யூ.கே.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுகாதார வளா கம் மற்றும் அங்கன்வாடி கட்டிடங் களை திறந்து வைத்தார். இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் தள பதி முருகேசன், சூலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்ப ரசு, கோவை அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் சி.பி.செந்தில்குமார், ஊராட்சி செய லாளர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முத்து ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர் கள் சிவஞானம், கனகராஜ், ஒன்றி யச் செயலாளர் சந்திரன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.