கோவை, நவ.27- புலியகுளம் 64 வார்டில், புதிய ரேசன் கடை கட்ட கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, பி.ஆர். நடராஜன், தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து, நிதி ஒதுக்கி இருந்தார்.
இப்பணிகள் நிறைவு பெற்று புதனன்று திறப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், புலியகுளம் பகுதி 64 ஆவது வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து 21 லட்ச ரூபாய் ஒதுக்கி புதிய நியாய விலை கடையை தண்ணீர் தொட்டி பின்புறம் கட்டப் பட்டது. அந்த புதிய கட்டடத்தின் 66 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ். ஜெயபிரதாதேவி சீனிவாசன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரச் செயலாளர் என்.சுபாஷ் கிழக்கு நகர கமிட்டி உறுப்பினர் த.நாகராஜ், 64 ஆவது வார்டு செயலாளர் மகேந்திரன், 66 ஆவது வார்டு செயலாளர் கே.நாக ராஜ், கிழக்கு நகர கமிட்டி உறுப்பினர் சத்யபாமா, 63 ஆவது வார்டு செயலாளர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.