கோபி, பிப். 1- ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள சவண்டப்பூர் ஊராட்சி ச.கணபதிபாளையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான திட்டங்களை அமைச்சர் முத் துசாமி துவக்கிவைத்தார். சவண்டப்பூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், 60ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை குடிநீர் தொட்டி, கான்கீரிட் தளம், உள்ளிட்ட புதிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலை வர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதிதுறை மதுவி லக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச் சர் சு.முத்துச்சாமி அந்தியூர் சட்டமன்ற உறுப் பினர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், மேல்நிலை குடிநீர் தொட்டி, கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செய லாளர் நல்லசிவம், கோபி வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, பொறியாளர் முருகே சன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.