திருப்பூர் செப்.14- ஏகேஆர் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோ-கோ போட்டியை மாநகர காவல் துணை ஆணையர் சனியன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி அணைப்புதூர் ஏகேஅர் பள்ளியில் மாணவ, மாணவியர்க ளுக்கு முதலமைச்சர் கோப்பைகான கோ-கோ போட்டியை மாநகர காவல் துணை ஆணையர் கிரிஸ் அசோக் யாதேவ் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட அளவிலான முதலமைச் சர் கோப்பைகான கோகோ போட்டியில் சாந்தி நிகேதன் பள்ளி முதலிடமும், கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண் டாம் இடமும் பெற்றது. இப்போட்டிகள் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார், ஏகேஆர் பள்ளி முதல்வர் கணேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.