திருப்பூர், மார்ச 25 - திருப்பூர் வெள்ளியங்காடு பகுதி யில் மார்க்சிஸ்ட் கட்சியின் தியாக சீலர் தோழர் என்.சங்கரய்யா படிப்ப கம் திறப்பு விழா உள்ளூர் மக்களின் குடும்பத் திருவிழாவாக கோலாகல மாக நடைபெற்றது. திருப்பூர் வெள்ளியங்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை களின் சார்பில் தியாக சீலர் தோழர் சங்கரய்யா படிப்பகம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இவ்வி ழாவுக்கு தெற்கு மாநகரக்குழு உறுப் பினர் கே.பொம்முதுரை தலைமை ஏற்றார். கிளைச் செயலாளர்கள் பி. கதிரேசன், பி. கோமதி ஆகியோர் முன்னிலை வகிக்க, மார்க்சிஸ்ட் கட் சியினர், தோழமைக் கட்சியினர் மற் றும் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் திரண்டிருக்க செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் ஏற்றி வைத்தார். தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரசேகர் வரவேற்றார். தியாகசீலர் தோழர் என்.சங்க ரய்யா படிப்பகத்தை கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி திறந்து வைத்தார். தோழர் என்.ஆறு முகம் உள் அரங்கத்தை மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் திறந்து வைத்தார். தோழர் என்.சங்கரய்யா உருவப்படத்தை மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் திறந்து வைத்தார். தோழர் என்.ஆறுமுகம் படத்தை மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உண்ணிகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதையடுத்து கம்யூனிஸ்ட் இயக்க மூலவர்கள் உள்ளிட்ட மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்கள் படங்களை கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் பி.பாலன், எஸ்.பானுமதி, ஆர்.குமார் உள் ளிட்டோர் திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து திமுக 52 ஆவது வார்டு செயலாளர் மு.நந்த கோபால், த.பெ.தி.க நிர்வாகி இலா. அங்குகுமார்,52ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் என்.கணேசன், மதிமுக வழக்கறிஞர் அணி மாவட்டப் பொறுப்பாளர் ஈ.என்.கந்தசாமி, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பி னர் என்.சேகர், தி.க. மாவட்டத் தலை வர் யாழ் ஆறுச்சாமி, பு.இ.மு மாநகர ஒருங்கிணைப்பாளர் அ.தமிழ் அமு தன், விசிக வார்டு பொறுப்பாளர் து. துரைவளவன், அ.இ.பா.பிளாக் மாந கர் மாவடட்த் துணைத் தலைவர் ஆர். ரவி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரை ஆற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன், மாநகரச் செயலாளர் டி. ஜெயபால் உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில் உள்ளூர் பெண்கள் நூற் றுக்கணக்கானவர்கள் உள்பட மார்க் சிஸ்ட் கட்சியினர், அனைத்துக் கட் சியினர், பொது மக்கள் ஆர்வத்து டன் பங்கேற்றனர். வெள்ளியங்காடு கட்டுமான கட்சி கிளைச் செயலாளர் பி.ரமேஷ் நன்றி கூறினார்.