ஈரோடு, அக்.31- அந்தியூர் அரசு மருத்துவமனை யின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி நவீன வசதிகள் செய்து, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணி யாளர்களை நியமித்து மேம்பட்ட மருத்துவ சிகிச்சை கிடைக்க ஆவண செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சுகாதாரத் துறை அமைச்சரிடம் மனு அளித்து வலியுறுத்தினர். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற் பதற்காக ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அளித்த மனுவில் தெரிவித்தி ருப்பதாவது, ஈரோடு மாவட்டம், அந் தியூர் மற்றும் பர்கூர் மலையில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்ற னர். இம்மக்களின் நல்வாழ்வு மைய மாக அந்தியூர் அரசு மருத்துவமனை திகழ்கிறது.
கொரோனா காலத்தில் குறைந்தபட்ச வசதிகளை கொண்டு மக்களின் உயிர் களை இம்மருத்துவமனை மருத்து வர்கள், செவிலியர்கள் உள்ளிட் டோர் தங்கள் உயிரை பணயம் வைத்து கடமையாற்றினர். இவ்வளவு முக்கியத்துவம் இம் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நிகரான வசதி களுடன் தரம் உயர்த்த வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் நவீன கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்தி மருத்து வர், செவிலியர், பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதனால் சேலம், ஈரோடு, கோவை போன்ற மருத்துவமனைக்கு செல்வதற்குள் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முடியும். எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபு ணர், அறுவை சிகிச்சை நிபுணர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபு ணர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். சிடி ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்க வேண் டும். மேலும், அந்தியூர் அரசு மருத்து வமனை வளாகத்தில் சித்தா மருத்துவ பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதி களையும் செய்து கொடுக்க வேண் டும் என அதில், தெரிவிக்கப்பட்டுள் ளது.