நாமக்கல், ஆக.29- ரியல் எஸ்டேட்டிற்கு முறையற்ற அனுமதி வழங்கிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அமானி கிராமம், நல்லாம்பாளையத்தில் மேட்டூர் கிழக்குக் கரை வாய்க்கால் தண்ணீர் பாயும் நெல் விளையும் நிலத்தை, தரிசு நிலம் என போலியாக ரியல் எஸ்டேட் பயன்பாட்டிற் காக ஆவணம் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. விளை நிலத்திற்கு வழங்கப்பட்ட சட்ட விரோத அனுமதியை ரத்து செய்ய வேண்டும். வீடு கட்ட கொடுக்கப்பட்ட மின் இணைப்பு களை ரத்து செய்ய வேண்டும். மேலும், முறையற்ற அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் அர்த்தனாரி தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செய லாளர் அன்புமணி, நகரச் செயலாளர் கணேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.