districts

img

3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்திடுக

கோவை, நவ.27- 3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், என வலியு றுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர் கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 3 ஆவது சம்பள மாற்றம், பென் சன் மாற்றத்தை 2017 ஆம் ஆண்டு  ஜனவரி 1 முதல், 15 சதவிகித உயர்வு டன் அமல்படுத்த வேண்டும். பிஎஸ் என்எல்-க்கு 4ஜி மற்றும் 5ஜி சேவை வழங்கும் பணிகளை விரைவுப டுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26 ஆயிரம் மற்றும் இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக பாது காப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும். 2 ஆவது விருப்ப ஓய்வூ தியத் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர் மற் றும் ஓய்வூதியர் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் இணைந்து, புதனன்று தர்ணாவில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டம், பிஜிஎம் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற தர்ணா போராட்டத்தில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலை வர் பாபு ராதாகிருஷ்ணன், மாநில உதவித்தலைவர் சி.சசிகுமரன், மாவட்டச் செயலாளர் எஸ்.மகேஸ் வரன், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஒய்.அப்துல் முத்தலிப் மற்றும் அகில இந்திய பிஎஸ்என்எல் டாட்  ஓய்வூதி சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.குடியரசு உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதேபோன்று, பொள் ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என்.பாபு தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 

தருமபுரி

பிஎஸ்என்எல் தருமபுரி பொது  மேலாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற தர்ணா போராட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் எம்.பரிதிவேல் தலைமை வகித்தார். இதில் மாநில  அமைப்பு செயலாளர் ஜி.உமா ராணி, மாவட்டச் செயலாளர் பி. கிருஷ்ணன், நிர்வாகி முனிராஜ், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் எம்.நாராயணசாமி, செயலாளர் டி.பாஸ்கரன், உதவித்தலைவர் என்.ரமேஷ், உதவிச்செயலாளர் எம்.பழனி, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில உதவிச்செயலாளர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

 ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற தர்ணாவிற்கு, ஒருங்கிணைப் புக்குழு தலைவர் வி.மணியன் தலைமை வகித்தார். இதில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலார் எஸ்.செல்வ ராஜன், மாவட்டச் செயலாளர் எஸ். பாலு, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்  சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் மணிபாரதி, மாவட்டத் தலை வர் பன்னீர், அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி. பரமசிவம், ஒப்பந்த ஊழியர் சங்க  மாநிலச் செயலாளர் எம்.சையத்  இத்ரீஸ், ஓய்வூதியர் சங்க மாநில  துணைச்செயலாளர் எல்.பரமேஸ் வரன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.

சேலம்

சேலம் பழைய பேருந்து நிலை யம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் இ.கோபால் தலை மையேற்றார். இதில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.தமிழ்மணி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்ற னர்.