districts

img

ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

பென்னாகரம், ஜன.5- மனித உரிமைகள் ஆணையத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற் றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கள்ளிபுரம், அண்ணாநகர், ஏங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னிலையில் நடை பெற்ற விசாரணையில், மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு உடனடி யாக பட்டா வழங்க வேண்டும் என தீர்ப்ப ளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அதற்கான எந்த முயற்சியும் மாவட்ட நிர்வா கம் மேற்கொள்ளவில்லை.  எனவே, இம்மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் புதனன்று வட்டாட்சியர் அலு வலகத்தில் குடியேறும் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலை வர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட செயலா ளர் மாதையன், பகுதித் தலைவர் தேவன், செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஸ்வ நாதன், ஆர்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் கே.அன்பு, ஆ.ஜீவானந்தம், ஜெய ராமன், எம்.சிவா, நகரச் செயலாளர் எழிலரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அசோக் குமார், பென்னாகரம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்திற் குள் பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைத்து அனைவரும் கலைந்து சென்றனர்.