தருமபுரி, ஜூன் 1- அரூர் அருகே நீண்ட ஆண்டுகளாக குடிசையில் வாழும் இருளர் இன மக் கள், அரசு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்குபட்டது கொத் தனார்பட்டி. இருளர் காலனி. இப்பகுதி யில் சுமார் 50 குடும்பங்கள் குடிசை அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பலர், வீடு இல்லாமல் ஒரே குடிசை வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வரு கின்றனர். காற்று வீசினால் குடிசையின் கூரை தூக்கி வீசப்படும் நிலையில் தான், இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். நீண்ட ஆண்டுகளாக இலவச வீட்டு மனை கேட்டதன் விளைவாக, அரசு இல வச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், வீடு கட்டும் அளவுக்கு வசதி யில்லாத நிலை உள்ளதால், அரசு வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.