உதகை, ஜன.17- நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10க்கும் மேற் பட்டோரை காவல் துறையினர் கைது செய்த னர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற் பனை செய்து வருவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு புகார் வந் தது. இதனடிப்படையில் அனைத்து சோத னைச் சாவடிகள் மற்றும் பல்வேறு இடங்க ளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், தேவர் சோலை, நாடுகாணி, மசினகுடி, கோத்த கிரி, புதுமந்து, உதகை நகர பகுதிகள் மற் றும் கிராமப் புறங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கைப்பற்றப்பட் டது.