நாமக்கல், நவ. 11- பள்ளிபாளையம் பகுதி யில் நடைபெறும் சட்டவி ரோத மது விற்பனையை தடுத்து, சம்பந்தப்பட்டவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு சனி சந்தை பகுதி அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, 18 ஆவது, வார்டு கட்சி கிளை செயலாளர் என்.தர்மராஜ் தலைமை ஏற்றார். ஒன்றிய செயலாளர் லட்சு மணன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினார். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சட்டவிரோதமாக பல்வேறு இடங் களில் மதுவிற்பனை நடைபெற்று வருகி றது. மேலும், லாட்டரி விற்பனை, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் கூலி வேலைக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக் கப்படுகின்றனர். அனுதினமும் எந்த நேரத்திலும் எளிதாக மது கிடைக்கும் சூழல் உள்ளதால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை சூழல் மாறி உள் ளது. சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் பங்கேற் றனர்.