தாராபுரம், மார்ச் 27 - தாராபுரம் அருகே அமராவதி ஆற்றங்கரை பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் தொடர்ந்து வெட்டி சாய்க்கப்பட்டுள் ளன. இந்த சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது வருவாய்த்துறையி னர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கூடுதுறை அம ராவதி ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றங்கரையோர பகுதி களில் மரங்கள் வளர்ந்துள்ளன. இங்கு இருந்த 50க்கும் மேற்பட்ட மரங்களை அடையாளம் தெரிய நபர்கள் வேராடு வெட்டியுள்ளனர். மரங்களை கடத்துவதற்காக மரங்களை துண்டுகளாக அறுத்து குவியலாக வைத்துள்ளனர். அரசுக்கு சொந்தமான பகுதியில் உள்ள மரங்களை சட்ட விரோதமாக அடையாளம் தெரியாத நபர்களால் கடத்துவது குறித்து பொதுமக்கள் வருவாய்த்துறைக்கு தக வல் அளித்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என புகார் கூறுகின்றனர். சொந்த இடத்தில் உள்ள பச்சை மரங்களை வெட்ட வேண்டுமானால் வருவாய்துறை யினரிடம் அனுமதி பெற்றே வெட்ட வேண்டும் என விதிமுறை உள்ள நிலையில், அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்ற னர்.