திருப்பூர், மார்ச் 9 - திருப்பூர் மாவட்ட நிர்வா கத்தின் முன்னோடி வங்கி யாகச் செயல்படும் கனரா வங் கியில் தமிழ் மொழி புறக்கணிக் கப்பட்டுள்ளது. திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள கனரா வங்கி யில் செயல்படும் ஏடிஎம் இயந் திரத்தில் இதுவரை தமிழ், ஆங் கிலம், இந்தி என மூன்று மொழிகளில் கணினி திரையை இயக்கி பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் வசதி இருந் தது. ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக தமிழ் மொழியை நீக்கிவிட்டு, ஆங்கி லம், இந்தி என இரண்டு மொழிகளில் மட்டுமே கணினி திரையில் சேவை பெறக்கூடிய வகையில் கணினியில் இயங்குதள செயல்பாட்டை மாற்றியுள்ளனர். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளிலும் மாற்றம் செய்துள்ளனர். இது வாடிக் கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள் ளது. தமிழ்நாட்டில் செயல்படும் வங்கியில், அதுவும் மாவட்ட முன்னோடி வங்கியாக இருக் கும் கனரா வங்கியில், தமிழ் மொழியை நீக்குவது கண்ட னத்துக்குரியது என்று கூறினர். ஏற்கெனவே இதுபோல் வெவ்வேறு வணிக வங்கிகளி லும் நேரடி சேவை பெறக்கூடிய செலான்களிலும், ஏடிஎம் மையங்களிலும் பயன்பாட்டில் இருந்த தமிழ் மொழியை நீக்கி இருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட் டம் அறிவித்த பின்னர் தமிழ் மொழியில் சேவை பெறுவதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு நிர்வாகத்தின், மாவட்ட முன்னோடி வங்கியா கச் செயல்படும் கனரா வங்கி யில் தமிழ் மொழியில் சேவையை நீக்கியது அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. உட னடியாக இந்த வங்கியின் செயல்பாட்டில் தமிழ் மொழி யில் சேவை பெறுவதை உறு திப்படுத்த வேண்டும். இல்லா விட்டால் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரிக்கை விடுத் துள்ளனர். இது குறித்து மாவட்ட முன் னோடி வங்கியின் மேலாள ரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, தற்போது வெளியூரில் இருப்பதாகவும், திங்களன்று வந்த உடன் இப்பிரச்சனையை கவனிப்பதாகவும் கூறினார்.