ஈரோடு மாநகராட்சிக்குட்பட்டது திண்டல் அருகே உள்ள காரப்பாறை. 31 ஆவது வார்டுக்குட்பட்ட இப்பகுதி யில் குடிநீர் மற்றும் உபயோகத்திற்கு தண்ணீர் வழங்க மேல் நிலை குடிநீர் தொட்டிகள் 3 உள்ளன. அவற்றில் ஒன்று மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. உரிய பராமரிப் பில்லாமல் தூண்கள், வண்ணப் பூச்சுகள் அழிந்து, சிமெண்ட் பூச்சுகள் விரிசலடைந்து, கம்பிகள் துருப் பிடித்து உள்ளது. மேல் கான்கிரீட்டு களும் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் மிக அரு கில் அங்கன்வாடி மையம் செயல்படு கிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடக் கும் முன் உரிய மறையில் பராமரிக்க வேண்டும். பாதாள சாக்கடைக்காக தோண் டப்பட்ட சாலைகள் மறு சீரமைக்கப் படவில்லை. இதனால் குண்டும், குழி யுமாக, சேரும், சகதியுமாக மாட்டு வண்டி தடங்களைவிட மோசமாகி உள்ளது. இதனால் நடந்து செல் வோரும், இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் இப் பகுதியிலும் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இரண்டு பொதுக்கழிப் பிடங்கள் அமைக்கப்பட்டள்ளது. அவற் றில் ஒன்று பெண்கள் மற்றொன்று மாற்றுத்திறனாளிகளுக்கானது. அது கடந்த 3 ஆண்டுகளாக சிதலமடைந் துள்ளது. பராமரிப்பின்றி பயன்பா டின்றி கிடக்கிறது. இதனால் அதனை பயன்படுத்தி வந்தவர்கள் அப்பகுதி யிலுள்ள பெரும்பள்ளம் ஓடையைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பயன்ப டுத்தி வருகின்றனர். இதனால் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனி நபர் கழிப்பி டங்களுக்கான பொருட்கள் கொடுக் கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வீடு கள் அதனைப் பயன்படுத்தி கட்டு மானம் செய்யப்படவில்லை. மாறாக அப்பகுதி மக்கள் பொதுக்கழிப்பறை களையே விரும்புவதால் இந்நிலை எனக் கூறப்படுகிறது. இக்கழிப்பறையின் அருகில் ஒரு ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட் டுள்ளது. தாழ்வான பகுதியானதால் அப்பகுதியிலள்ள கழிவு நீர் அங்கு வந்து பெரும்பள்ளம் ஓடையில் கலந்து வந்தது. தற்சமயம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி அந்த ஓடையின் கரைகள் சிமெண்ட் மற்றும் கான்கி ரிட்டால் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற் றம் வீசுகிறது. அதன் நடுவில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்தும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் உள் ளிட்ட பயன்பாடுகளுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் விளை யும் சுகாதாரக்கேடுகளை எண்ணிப் பார்க்க முடியவில்லை. மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு நிதி இல்லை எனக்கூறப் படுகிறது. ஆனால் இந்த 30 வார்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். கார ணம் அப்பகுதியில் மிகவும் பிற்படுத் தப்பட்டவர்கள் இருந்தாலும் பெரும் பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதாலே என்று கூறப்படுகிறது. திராவிட மாடல் அரசும், மாநகராட்சி நிர்வாகமும் கவனிக்குமா? என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-சக்திவேல், ஈரோடு.