districts

ஆளுநர் வேலையை பார்க்கச்சொன்னால் ஆராய்ச்சியாளர் வேலை பார்க்கிறார்

கோவை, அக்.26- எதையும் படிக்காமல் உளரிக் கொண்டு, ஆளுநர் வேலையை பார்க் கச் சொன்னால் ஆராய்ச்சியாளர் வேலையை ஆளுநர் பார்ப்பதாக பி.ஆர்.நடராஜன் எம்பி., குற்றம் சாட்டினார். “பொது சொத்துகளில் பட்டியல் இன மக்கள் உரிய பங்கினை பெற  சட்டம் இயற்ற வலியுறுத்தி கோவை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இயக்கங்களின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசுகையில், அனைத்து முற் போக்கு அமைப்புகள் சார்பில் ஹைதரா பாத்தில் கூடிய மாநாடு, நாடு முழுவதும்  இருக்கக்கூடிய பட்டியல் இன மக்கள்,  ஜனநாயகத்தை நேசிக்கக் கூடிய மக்களிடையே கையொப்பம் பெருவது  என்றும், இதனை குடியரசு தலைவரி டத்தில் தருவதற்காக, டிசம்பர் 4 ஆம்  தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் கையெ ழுத்து இந்த இயக்கம் துவங்கப்பட் டுள்ளது. ஆளுநர் அதிகமான விஷயங் களை உளரிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு ஆளுநர், ஆளுநரின் வேலையை பார்க்காமல் ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அது வும் தவறான முறையில் செய்து வரு கிறார். ஆரியமும் இல்லை திராவி டமும் இல்லை என்று ஆளுநர் கூறி னால், கோல்வார்க்கர் ஆரியம் சம்பந் தப்பட்ட புத்தகத்தை ஏன் எழுதினார். ஆளுநர், ஆர்எஸ்எஸ்யைச் சேர்ந்தவர்  தானே, இவர் அதையும் படிக்க வில்லை. எனவே, ஆளுநரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இல்லையெனில் வரலாற்றை படித்து விட்டு பேச வேண்டும். திரித்துக் கூறு கின்ற வரலாறுகளை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என்றார். இந்நிகழ்வில் மார்க்சிய, பெரியா ரிய, அம்பேத்கரிய அமைப்புகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.