தருமபுரி, ஜன.7- தருமபுரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட் டிகள் நடத்தினால் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள் ளார். தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்துவதற்கான முன் னேற்பாடு பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் ஜல் லிக்கட்டு விழாக்குழுவினர்களுட னான ஆலோசனைக் கூட்டம் ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு போன்ற நிகழ்ச்சி கள் நடத்துவது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறி முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்நிகழ்சிகள் நடத்துவ தற்கான அனுமதி அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு மட் டும் வழங்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்ன தாக www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண் ணப்பம் அளித்து அரசாணை மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் 300க்கும் மிகாத மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படு வார்கள். நிகழ்விடத்திற்கு தேவை யான அடிப்படை வசதிகள், கண்கா ணிப்பு கேமரா வசதிகள், மருத்துவ வசதி, காளைகளுக்கான தண்ணீர், தீவன வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். நிகழ்வுகள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4 வரை மட்டும் நடத்த அனுமதி வழங்கப்படும். காளைகள் மருத்துவ பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். பரிசோதனை யில் நிராகரிக்கப்படும் காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. வீரர்களும் மருத்துவ பரி சோதனைக்கு பின்னரே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போதிய அளவில் அவசர சிகிச்சைக்கான ஏற் பாடுகள் செய்யவும், அவசர ஊர்தி கள் நிகழ்விடத்திலிருந்து செல்வதற் கான வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்கள் செய்ய வேண்டும். அனுமதி இல்லாமல் எந்தவிதமான நிகழ்வு களையும் நடத்தப்படக்கூடாது. முழு நிகழ்வும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களால் தேசியமயமாக்கப்பட்ட நிறு வனத்தின் மூலம் காப்பீடு செய்யப் பட்டிருக்க வேண்டும். அனுமதி யின்றி நடத்தப்படும் நிகழ்வுகளில் உரிய வழக்குப்பதிவு செய்து நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். அனு மதி வழங்கப்படும் இடத்தில் எவ்வித மான அசம்பாவிதங்களும் ஏற்படா மல் நிகழ்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி னார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடு தல் காவல் கண்காணிப்பாளர் பால சுப்ரமணியம், வருவாய் கோட்டாட்சி யர்கள் டி.கே.கீதாராணி (தருமபுரி), வில்சன் ராஜசேகர் (அரூர்), வட்டாட் சியர்கள் உட்பட ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.