திருப்பூர் அக்.12 - திருப்பூர் அருகே ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் 50ஆவது இந்திய பின்ன லாடை பொன்விழா கண்காட்சி வியா ழக்கிழமை தொடங்கியது. திருப்பூர் அருகே பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அணைப்புதூ ரில் இந்திய பின்னலாடை கண்காட்சி (ஐ.கே.எப்.ஏ.) வளாகம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் குளிர் கால மற்றும் கோடை கால ஆடைகள் பின்னலாடை கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன் படி தற்போது 2024 ஆம் ஆண்டு கோடை மற்றும் வசந்த காலத்திற் கான ஆடைகளை காட்சிப்படுத்தும் 50ஆவது பொன்விழா கண்காட் சியை, எத்திக்கல் டிரேடிங் இனிசி யேட்டிவ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பீட்டர் மெக் அலிஸ்டர் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். ஐ.கே.எப். தலைவர் ஏ.சக்தி வேல், பிராண்ட் சோர்சிங் லீடர்ஸ் அமைப்பின் தலைவர் எஸ்.ராமச் சந்திரன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிர மணியம், பையிங் ஏஜெண்டுகள் சங்கத் தலைவர் வி.இளங்கோவன் மற்றும் ஜவுளித் துறை சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளாக செயல்படும் சஞ்சய், ரோஹித், ரோகிணி உள்ளிட்டோர் மற்றும் ஏற்று மதியாளர் சங்க நிர்வாகிகள், தொழில் துறையினர், வர்த்தக முக வர்கள் இந்த நிகழ்வில் பங்கேற் றனர். இக்கண்காட்சியில் திருப்பூர், கோவை, சேலம், கரூர், சென்னை மற் றும் குஜராத், டெல்லி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த 82 ஏற்று மதியாளர்கள் பங்கேற்று 100 அரங்கு கள் அமைத்திருந்தனர். வழக்கமாக இக்கண்காட்சியில் இடம் பெறும் பருத்தி டி சர்ட் உள்ளிட்ட ரகங்கள் இல்லாமல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டு தொழில்நுட்ப ஆடை கள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத் தாத ஆடைகள், ஆடை தயாரிப் புக்கு பயன்படும் உப பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பையர்கள் எனப்படும் வர்த்த கர்கள் சமீப காலமாக இதுபோன்ற கண்காட்சிகளுக்கு வருவது குறைந் துள்ளது. எனினும் வெளிநாட்டு சந் தைகளில் ஆடைகளை அனுப்பும் பையிங் ஏஜெண்டுகள் எனப்படும் வர்த்தக முகவர்கள் 250இல் இருந்து 300 பேர் வரை இக்கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்ப் பதாக ஐகேஎப்ஏ தலைவர் ஏ.சக்தி வேல் கூறினார். ஐகேஎப்ஏ, ஏஇபிசி ஆகிய அமைப்புகளுடன் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம், சென்னை மற்றும் கரூர் ஏற்றுமதியாளர் அமைப்புகள் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி வரும் 14ஆம் தேதி சனிக்கிழமை நிறைவு பெறுகிறது.