districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்த கணவர்

மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்த கணவர் சேலம், மார்ச் 30- மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத் தறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவான கண வரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாய்க்கால்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் – பெரியம்மா தம்பதியினர். கண வன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரண மாக, பெரியம்மா கடந்த 2 மாதமாக கணவரை விட்டு பிரிந்துள் ளார். இவர், வால்மீகி தெருவில் உள்ள தனது மகள் சசிக லாவின் பழக்கடையில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள் ளார். இந்நிலையில், வெள்ளியன்று இரவு அங்கு வந்த ரவிச்சந்திரன் மது குடிக்க பணம் கேட்டு பெரியம்மாவிடம் தக ராறு செய்துள்ளார். அப்போது பெரியம்மா பணம் தர மறுத்த தால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் பெரியம்மா சடலமாக கிடப் பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சேலம்  டவுன் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். அதன் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீ சார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மனை வியை படுகொலை செய்து விட்டு, தலைமறைவான ரவிச்சந்தி ரனை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்பனைச்  செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேலம், மார்ச் 30- காடையாம்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற் பனைச் செய்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுஷத்துள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம் பட்டி தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. கடந்த வாரம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்துள்ள நிலையில், தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் கிராமத் தைச் சேர்ந்த மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மது அருந் தியுள்ளனர். இதனை தங்களது செல் போன்களில் வீடியோ பதிவும் செய் துள்ளனர். இதைத்தொடர்ந்து மதுபோ தையுடன் அங்குள்ள அரசு பள் ளிக்கு வந்து ‘செல்பி’ எடுக்க முயற் றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி  பொதுமக்கள், மாணவர்கள் மது  போதையில் பள்ளிக்கு வந்துள்ளதா கவும், அவர்களை தடுத்து நிறுத்தி உரிய ஆலோசனை, அறிவுரை வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இத னைத்தொடர்ந்து, போலீசார் மாண வர்களை அழைத்து வந்து, உரிய ஆலோசனை, அறிவுரைகள் வழங்கி யதுடன் எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். இதனிடயே மாணவர்கள் கும்ப லாக அமர்ந்து மது அருந்தும் வீடி யோக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாண வர்களுக்கு மது விற்றவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

நகராட்சி வணிக கட்டிடங்கள் இடிப்பு

நாமக்கல், மார்ச் 30- ராசிபுரம் பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாக னம் நிறுத்துமிடம் கட்டும் பணிக்காக கடந்த 50 ஆண்டுகால  பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலை யம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக வணிக வளாகம்,  பயன்படுத்த முடியாத வகையில் இருந்து வந்தது. இக்கட்டி டங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், நக ராட்சி சார்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு  செய்யப்பட்டது. ராசிபுரம் நகரில் குறுகிய சாலைகள் கொண்ட தாக இருப்பதால், இருசக்கர, நான்கு வாகனம் நிறுத்துமி டம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து  ரூ.5.75 கோடி மதிப்பில் இதற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. தற்போது 50 ஆண்டு கள் பழமையான இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின் றன. இதனையடுத்து ஓராண்டில் வாகனம் நிறுத்துமிடத்து டன் கூடிய ஈரடுக்கு வணிக வளாகப் பணிகள் முடிவடை யும் என தெரிகிறது.

போதை மீட்பு மையத்தில் கல்லூரி மாணவர் பலி

கோவை, மார்ச் 30- கோவையில் போதை மீட்பு மையத் தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து என்ப வர் அரசு மருத்துவராக பணியாற்றி வரு கிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர்  கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வருகிறார். கடந்த சில நாட் களுக்கு முன்பு கிஷோர் போதைக்கு  அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க பெற்றோர் எடுத்த  முயற்சிகள் எதுவும் பலனளிக் கவில்லை. இதையடுத்து, கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற  போதை மீட்பு மையத்தில் அவரை சிகிச் சைக்காக பெற்றோர்கள் சேர்த்துள் ளனர். கடந்து சில நாட்களாக கிஷோ ருக்கு, அங்கு வார்டன் அரவிந்த் ஹரி,  உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்த தாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சிகிச்சை முறை கள் கடுமையாக இருந்ததாலும், போதையில் இருந்து மீள முடியாமல் கிஷோர் தவித்து வந்ததாலும், வீட் டிற்கு செல்ல வேண்டுமென கூறி  அடம்பிடித்து உள்ளதாக சொல்லப் படுகிறது. இதனால் மீட்பு மைய ஊழி யர்கள், வெள்ளியன்று கிஷோரின் கை,  கால்களை கட்டி அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். அப்போ தும், அவர் அதிக கூச்சலிட்டதால், அவ ரது வாயில் துணியை வைத்து அடைத் ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட  மூச்சு திணறலில் மாணவர் கிஷோர் உயி ரிழந்துள்ளார். இதனால் நிர்வாகிகள் இது தொடர் பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவில் பாளையம் போலீஸார், கிஷோரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட  விசாரணையில், சிகிச்சையின் போது  மாணவர் உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை மையத்தின்  வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல்  மருத்துவர் பிரசன்னா ராஜ் ஆகியோரை  கைது செய்து போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மையத்தில் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த 30 பேரையும் வேறு மையத்திற்கு மாற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதை மறுவாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் பறிமுதல் சேலம், மார்ச். 30- கெங்கவல்லி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோத னையின் போது  சொகுசு கார் நிற்காமல் சென்ற காரை  மடக்கி பிடித்து சோதனையிட்டதில்  பல லட்சம் மதிப்பிலான 50  மூட்டை ஹான்ஸ்,குட்கா  போதை பொருள் பிடிப்பட்டது.  தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்கள வைத் தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலை யில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோத னையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே  உள்ள வீரகனூர் பகுதியில்  இரவு, தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் தேர்தல் பறக்கும் படை அதிகா ரிகளை கண்டவுடன் அதிவேகமாக நிற்காமல் சென்றது. சந்தே கம் அடைந்த தேர்தல் அலுவலர்கள் காரை துரத்தி மடக்கி  பிடிக்கச் சென்றபோது, சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நி லையில், சாலை ஓரம் இருந்த காரை சோதனை செய்த போது காரில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பது மூட்டை குட்கா,  ஹான்ஸ், விமலா பாக்கு கூலிப்ஸ், உள்ளிட்ட போதை பொருட் கள் முட்டை முட்டையாக மறைத்து வைத்து எடுத்துச் சென் றது  தெரிய வந்தது இதனை எடுத்து வீரகனூர் போலீசார் போதைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர் , போதை பொருட்கள் கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் அலை

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் அலை சேலம், மார்ச் 30- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெப் பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகி ரிக்கு மேல் வெயில் அடித்து மக்களை வாட்டி வதைக் கிறது. இதனையடுத்து தொடர் விடுமுறை காரணமாக  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து குவிந்து  வருகின்றனர்.

கடமான் மோதி தடுமாறி விழுந்தவர் பலி

கடமான் மோதி தடுமாறி விழுந்தவர் பலி கோவை, மார்ச் 30- ஆழியார் அருகே கடமான் குறுக்கே வந்ததால், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கிழே விழந்த தில், இளைஞர் ஒருவர் பலியானார். கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த வால்பாறை யில் வசித்து வருபவர் மணிகண்ட பிரபு. இவர்,  தனது வீட் டிற்கு செல்வதற்காக ஆழியார் வாகன சோதனை சாவ டியில் இருந்து, வால்பாறை நோக்கி தனது இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு அருகே சென்ற போது, கட மான் ஒன்று குறுக்கே வந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந் துள்ளார். இதில் மணிகண்ட பிரபுவுக்கு பலத்த காயம்  ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கிருந்தவர்கள் 108 ஆம்பு லன்ஸ் உதவியுடன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மணிகண்ட பிரபு இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வனத்துறை சார்பில் சனியன்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மணிகண்ட பிரபு கீழே  விழுந்த இடத்தில் இருந்த இரத்த கசிவில், கடமானின் முடி கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மணி கண்ட பிரபு எதிர்பாராத விதமாக கடமான் மோதி உயிரி ழந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விபத்தில் இறந்த மணிகண்ட பிரபுவின் குடும்பத்திற்கு, ஈமச்சடங்கு செய்ய வனத்துறை சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப் பட்டது.

சுற்றுச்சுவர் அமைக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் மீது வழக்கு

கோபி, மார்ச் 30- கோபி அருகே விவசாய நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க  முயன்றவரை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூர் நஞ்சகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரிநாதன் இவர் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் தனது தந்தை  வழி சொத்தான 1 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை சாகுபடி  செய்துள்ளார். இந்நிலையில் வெள்ளியங்கிரிநாதனுக்கும் அவரது நிலத் திற்கு சேந்தாற்போல் குடியிருக்கும் கனகராஜ் குடும்பத்தா ருக்கு ஏற்கனவே விவசாய நிலத்தின் அத்து குறித்தான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வியா ழனன்று வெள்ளியங்கிரிநாதன் தனது நிலத்திற்கு அத்து செய்து சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இதற்காக, எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொண்டு வந்து இறக்கி பணியை மேற்கொண்ட போது, கூட்டு விவசாய கிணறுக்கு பாத்தியப்பட்ட கனகராஜ் அவ ரது மனைவி கலைவாணியும் இவர்களுக்கு ஆதரவாக  தர்மன், பாப்பாத்தி, மல்லிகா ஆகியோர், வெள்ளியங்கிரி நாதனிடம் உனக்கு இங்கு நிலம் இல்லை நீ இங்கு அத்துக் காக சுவர் எழுப்ப கூடாது என தகராறு செய்து வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளனர்.  பின்னர், கனகராஜ் மறைத்து வைத்திருந்த அரிவாளல் வெள்ளியங்கிரிநாதனை வெட்ட முற்பட்டபோது தனது கைகளை கொண்டு தடுத்ததால் கையை இரண்டு முறை பல மாக வெட்டியுள்ளார். மேலும் தர்மன் சூரிகத்தியால் கையை குத்தியதில் வெள்ளியங்கிரிநாதன் படுகாயமடைந்து கூச்ச லிட்டுள்ளார். இதை கண்ட வெள்ளியங்கிரிநாதனின் மனைவி  மனோன்மணி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு அக்கம் பக்கத் தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து படுகாயமடைந்த  வெள்ளியங்கிரிநாதனை  மீட்டு கோபி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இது குறித்து கோபி காவல்துறையினர் விசாரணை நடத்தி யதில் வெள்ளியங்கிரி நாதனிடம் தகராறு செய்து வாக்குவா தத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டிய கனகராஜ் அவரது  மனைவி கலைவாணி மற்றும் சூரிகத்தியால் குத்திய தர்மன்  அவரது மனைவி மல்லிகா, தாய் பாப்பாத்தி ஆகிய ஐந்து பேர்  மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி மனோன் மணி தெரிவிக்கையில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கன கராஜ் என்பவர் தொடர்ந்து அத்து தொடர்பான தகராறில் ஈடு பட்டு வருகிறார். தற்போது அரிவாளால் கொலை செய்யும்  அளவிற்கு துணிந்து விட்டனர். இரு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ள தாகவும் காவல்துறையினர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு  உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார்.

போதை மீட்பு மையத்தில் கல்லூரி மாணவர் பலி

கோவை, மார்ச் 30- கோவையில் போதை மீட்பு மையத் தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து என்ப வர் அரசு மருத்துவராக பணியாற்றி வரு கிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன் றில் பிபிஏ படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் போதைக்கு அடிமையானதாக கூறப் படுகிறது. இதனை தடுக்க பெற்றோர்  எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக் கவில்லை. இதையடுத்து, கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற  போதை மீட்பு மையத்தில் அவரை சிகிச் சைக்காக பெற்றோர்கள் சேர்த்துள்ள னர். கடந்து சில நாட்களாக கிஷோ ருக்கு, அங்கு வார்டன் அரவிந்த் ஹரி,  உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சிகிச்சை முறைகள்  கடுமையாக இருந்ததாலும், போதை யில் இருந்து மீள முடியாமல் கிஷோர்  தவித்து வந்ததாலும், வீட்டிற்கு செல்ல வேண்டுமென கூறி அடம்பிடித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இத னால் மீட்பு மைய ஊழியர்கள், வெள்ளி யன்று கிஷோரின் கை, கால்களை கட்டி  அவருக்கு சிகிச்சை அளிக்க முயற் சித்துள்ளனர். அப்போதும், அவர் அதிக  கூச்சலிட்டதால், அவரது வாயில் துணியை வைத்து அடைத்ததாக கூறப் படுகிறது. இதனால் ஏற்பட்ட மூச்சு திண றலில் மாணவர் கிஷோர் உயிரிழந் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைய  நிர்வாகிகள் இது தொடர்பாக போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பாளையம் போலீஸார், கிஷோரின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசார ணையில், சிகிச்சையின் போது மாணவர் உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை மையத்தின் வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல்  மருத்துவர் பிரசன்னா ராஜ் ஆகி யோரை கைது செய்து போலீஸார் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இந்த மையத்தில் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த 30  பேரையும் வேறு மையத்திற்கு மாற்ற  வருவாய்த்துறை அதிகாரிகள் நடவ டிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதை மறு வாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர்  உயிரிழந்துள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் புதைச்சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறது பாஜக ஆட்சி! திருப்பூரில் கே.சுப்பராயன் வாக்கு சேகரிப்பு

திருப்பூர், மார்ச் 30 - ஊழல் புதைசேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிற ஆட்சிதான் மோடி  தலைமையிலான பாரதிய ஜனதா  கட்சியின் ஆட்சி என்று திருப்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் வேட்பாளர் கே.சுப்பராயன் கூறி னார். கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு  நாட்கள், திருப்பூர் தெற்கு தொகுதி,  வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களிடம் ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார். அபோது, வேட்பாளர் கே.சுப்ப ராயன் வாக்காளர்களிடம் பேசுகை யில், இந்திய அரசின் கணக்குகளை தணிக்கை செய்யும் சி.ஏ.ஜி குழு,  மோடி அரசின் பணம் எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை, ஆராய்ந்து பார்த்து, ஒதுக்கிய பணத் தில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது என் பதை கண்டறிந்து தெரிவித்திருக் கிறது. சாலை போட்டதில் முறைகேடு,  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் செத்த வர்கள் பெயரில் காப்பீடு தொகை எடுத்தது என பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஊழல் புதை சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிற ஆட்சிதான் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என  விமர்சித்தார். மேலும், இந்த தேர்த லில் இந்தியா கூட்டணிதான் ஆட் சிக்கு வரும், ஆட்சிக்கு வந்தவுடன்  இவர்களுடைய முறைகேடுகள், சட்டவிரோத செயல்கள், தேச விரோத நடவடிக்கை உட்பட சகல மும் விசாரணைக்கு உட்படுத்தப்ப டும். உரிய தண்டனைக்காக அவர் கள் காத்திருக்கத்தான் வேண்டும்,”  என்றார். வெள்ளின்று குமரகோபு ரத்தில் இரு குழந்தைகளுக்கு பெயர் வைக்க கேட்டுக் கொண்ட தன் அடிப்படையில் பெண் குழந் தைக்கு தமிழ்மணி என்றும், ஆண் குழந்தைக்கு வெற்றிச்செல்வன் என்றும் பெயர் சூட்டினார்.  இந்த பயணத்தில் திராவிடர் முன் னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கா.செல்வராஜ் எம் எல்ஏ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், திமுக தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.நாகராஜ் வடக்கு மாநகரச் செயலாளர், மாந கர மேயர் தினேஷ்குமார், துணை மேயர் எம்.கே.எம். பாலு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் கழகங்கள் உள் ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர் கள் ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.

அமைச்சர் சாமிநாதனிடம் முன்னாள் அமைச்சர் கோரிக்கை

அமைச்சர் சாமிநாதனிடம் முன்னாள் அமைச்சர் கோரிக்கை ஈரோடு, மார்ச் 30- பழைய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம், முன்னாள் அமைச்சர் தோப்புவெங்கடாசலம் கோரிக்கை வைத்தார். ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளியில், திருப்பூர் மக்க ளவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது. இதில், தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங் கேற்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் தோப்புவெங் கடாசலம், அமைச்சர் சாமிநாதனிடம் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தார்.  இதில்,ஊத்துக்குளி யூனியனின் பொதுமக்கள் மற்றும்  விவசாயிகளின் நலனை கருதி அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர  வேண்டும், இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை ஆய்வுகள் மேற்கொண்டு, விவசாயிகளின் நலனைக் கருதி நிறுத்தப்பட்டுள்ள பழைய கொடிவேரி கூட்டு  குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு  வர வேண்டும் என்றார். அப்பொழுது தான் ஊத்துக்குளி யூனி யனுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு  குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை தீரும் என்றார்.

அமைச்சர் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

கோவை, மார்ச் 30- கோவை, கவுண்டம்பாளையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த னர். கோவை மக்களவை தொகுதியில் திமுக  சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகி றார். அவரை ஆதரித்து தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை யில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்து  வருகிறார். இந்நிலையில் சனியன்று கோவை  கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை செய்ய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு டிஆர்பி ராஜா செல்கை யில், அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு சாலையில் நின்றிருந்த அவரது காரில், அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை செய்த நேரத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அங்கு இல்லை. காரின் பின்புற கதவை  திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண் டனர். அச்சோதனையில் எதுவும் இல்லை யென்றவுடன், திரும்பி சென்றனர்.

ஈரோடு களத்தில் 31 வேட்பாளர்கள்

ஈரோடு களத்தில் 31 வேட்பாளர்கள் ஈரோடு, மார்ச் 30- நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.  அதற்கான வேட்பு தாக்கல் தொடங்கி பரிசீலனை முடிந்துள்ளது. இந்நிலை யில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளில் 37 வேட்பாளர்கள் இருந்தனர். இதில் 6 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப்பெற்றனர். இறுதியாக இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உட்பட 31 பேர் களத்தில் உள்ளனர்.

ரூ.10.35 லட்சம் பறிமுதல்

ரூ.10.35 லட்சம் பறிமுதல் தருமபுரி, மார்ச் 30- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி காவல் நிலை யத்திற்கு அருகில் பறக்கும் படை குழு - 2 ஊழியர்கள் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரண்டள்ளியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற, லட்சுமி என்பவர் தேர்தல் நடத்தை விதிகள் மீறி, உரிய ஆவணங்களின்றி ரூ.10 லட்சத்து 35 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாலக்கோடு சார்நிலை கரு வூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் கோவை, மார்ச் 30- கோவையில் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர் மீது பாஜக குண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் செல்லும் வழியில், நேசனல் ஜனசக்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் “NO MODI, NO GUARANTEE” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த, சுவரொட்டியில் பாசிச மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராகவும், இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என் றும் எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த புதனன்று இரவு, அக்கட்சியின் தலைவரான ரஹ்மான் கே.மூப்பனார், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தார். அப்போது, பெரியநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக குண்டர் படையி னர் அவரை சுற்றிவளைத்து மிரட்டியுள்ளனர். மேலும், சுவ ரொட்டி ஒட்ட வைத்திருந்தப் பசையை அவர் மீது ஊற்றி, “யாரு டா நீ தீவிரவாதியா? என்று மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட பாஜக குண்டர் படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், பாஜக குண்டர்களிடமிருந்து அவரை மீட்டு காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறு கையில், எந்தவொரு கட்சியையும் விமர்சித்து சுவரொட்டி ஒட்ட, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமையுண்டு. தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் ஒருவர் சுவரொட்டி ஒட்டுவது சாதாரணமான நிகழ்வு தான். ஆனால், கோவையிலுள்ள பாஜக குண்டர் படையினர் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக ஏதேனும் சுவரொட்டி இருந்தால் கிழிப்பது, சுவரெழுத்தை அழிப்பது, ஒட்டுப வரை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது போன்ற அடாவடித் தனங்களில் ஈடுபடுகின்றனர். பாசிச பாஜக கும்பலுக்கு எதி ராக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்து வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.  கோவையில், இனிவரும் காலங்களில் மோடிக்கு எதிராக  பொதுவெளியில் பேசவும், பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் முயற் சித்து வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ் - பாஜக குண்டர்படையினருக்கு எதிரான களப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சுவரொட்டி ஒட்டிய நபரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதோடு, தாக்கு தல் நடத்திய பாஜக குண்டர்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பாமக வேட்பாளர் உட்பட 11 பேர் மீது வழக்கு

மேச்சேரியில் அனுமதியின்றி கூட்டம்  நடத்திய தருமபுரி மக்களவை தொகுதி யின் பாமக வேட்பாளர் மற்றும் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மக்களவை தொகுதியில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலை யில், கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பா ளர் அறிமுக கூட்டம் புதனன்று சேலம் மாவட்டம், மேச்சேரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனுமதி பெறப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதைய டுத்து, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட  பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி,  பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பி னர் சதாசிவம், பாமக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகர், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், அமமுக சேலம் மாவட்டச் செயலாளர் செல்வம் உட்பட 11 பேர் மீது மேச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.