districts

img

நூறு நாள் தொழிலாளர்களுக்கு 4 மாதங்களாக வேலை இல்லை ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், ஆக. 6 - மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி  திட்டத்தில் வேலை அட்டை வைத்திருந்தும்,  நான்கு மாதங்களாக வேலை வழங்கப்படா ததால் செவ்வாயன்று அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில்  கம்மாளகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகம்  முன்பு 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர் கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் கம்மாள குட்டை ஊராட்சியில் 4 மாதங்களாக பயனா ளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்தின்படி வேலை வழங்க வில்லை. இதுதொடர்பாக ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த மாதம்  8ஆம் தேதி மனு அளித்த போது, அனைத்து  பஞ்சாயத்துகளிலும் விரைவில் 100 நாள்  வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று  தெரிவித்திருந்தார். ஆனால் கம்மாளகுட்டை ஊராட்சியில் இதுவரை  ஒருவருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை.  ஜூலை 29 ஆம் தேதி, ஊராட்சி 100க்கும் மேற்பட்ட வேலையில்லாத 100 நாள் திட்ட  பயனாளிகள் இதுதொடர்பாக கம்மாள ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது, உறுதியான பதில் ஏதும் தரவில்லை. அத்து டன் இதுவரை யாருக்கும் வேலை வழங்கப் படாததால், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தலைமையில் செவ்வா யன்று கம்மாளகுட்டை ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஊத்துக் குளி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி யன், குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வா ளர் சுசிலா ஆகியோர் சங்க நிர்வாகி கள் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், ஒரு  வாரத்திற்குள் உரிய நிர்வாக அனுமதி பெற்று  வேலை அட்டை வைத்துள்ளவர்களுக்கு பணி வழங்குவதாக உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக இந்த போராட்டத்திற்கு அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமை  வகித்தார். தாலுகா செயலாளர் க.பிரகாஷ்,  கம்மாளகுட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்  ராஜ்பரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ். கே.கொளந்தசாமி, குன்னத்தூர் நகரச் செய லாளர் பா.சின்னச்சாமி, தாலுகாக்குழு உறுப் பினர் வி.காமராஜ் ஆகியோர் பேசினர். திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.