districts

img

எம்ஆர்எம் அரிசி ஆலையின் ஊழியர் விரோத போக்கு

பொள்ளாச்சி, செப்.18- பொள்ளாச்சியில் டிஎன்சிஎஸ்சி நிர்வாகத்திற்கு சொந்தமான எம்ஆர்எம் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் ஊழி யர் விரோத, நிர்வாக ஊழல்களை கண் டித்து சிஐடியு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் (டிஎன்சிஎஸ்சி) நிர்வாகத்தின் கீழ் எம்ஆர்எம் அரிசி ஆலை செயல்படுகி றது. இங்குள்ள அதிகாரிகளின் ஊழல் காரணமாக ஏற்பட்டுள்ள பற்றாக்கு றையை, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து வருகின்றனர். அரிசி ஆலையில் கிடங்கில் இருந்து வரும் நெல்லினை பிர தான வாயில் வழியாக வாங்காமல், விதி களை மீறி உள் வழியாக வாங்கி ஊழ லுக்கு வித்துடுகின்றனர். மேலும், பொள் ளாச்சி நவீன அரிசி ஆலை இயந்திரங் களை உரிய முறையில் பராமரிப்பு செய்திட வேண்டும். ஆலையில் டஸ்ட் கிளீனர் இயந்திரம் எதுவும் இல்லாத காரணத்தால் பணிபுரியும் பணியாளர்க ளுக்கு மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படுகி றது. எனவே இதை உடனடியாக  இதனை சரி செய்திட வேண்டும். தரம மான குடிநீர், கழிவறை, ஓய்வறை ஆகியவற்றை உடனே பாராமரிப்பு செய்திட வேண்டும். 10 வருடம் பணி யாற்றிய ஊழியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு மற் றும் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  பொள்ளாச்சி திருவள்ளுவர் திட லில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தலைமை வகித்தார். கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எம்.பரமசி வம், டிஎன்சிஎஸ்சி - சிஐடியு மாநிலப் பொருளாளர் எம்.ஏழுமலை, குடிநீர் வடிகால் வாரியம் பொதுச் செயலாளர் எஸ். சரவணன், பொள்ளாச்சி சிஐடியு நிர்வாகிகள் ஆர்.சேதுராமன், ஆர்.பிர பாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்வின் முடி வில் என்‌.ராமன் நன்றி கூறினார். இதில், ஏராளனோர் கலந்து கொண்டனர்.