districts

img

ராசிபுரம் அருகே கோர விபத்து: 3 பேர் பலி

நாமக்கல், நவ.23- ராசிபுரம் அருகே தனி யார் பயணிகள் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயங்களுடன் மருத்து வமனையில் சிசிக்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டை ஒன்றியத்திற்குட் பட்ட, கோரையாறு அருகே வெள்ளியன்று இரவு ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அதேபோல ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி வந்து  கொண்டிருந்த தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்தக் கோர விபத்தில் ஆத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மற்றும் தனியார் பேருந்து ஓட்டு நர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி நாமகிரிப்பேட்டை பகு தியைச் சேர்ந்த அலமேலு (52) என்ற பெண்  உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமகிரிப் பேட்டை காவல்துறையினர் மற்றும் தீய ணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக் கிய மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட் டனர். இரண்டு மணி நேர போராட்டத் திற்குப் பிறகு உயிரிழந்தவர்களின் உடல் களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தைகள் உட்பட 21 பேர், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை  பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை  அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர், நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மேல்  சிகிச்சை தேவைப்படும் நபர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா விபத்தில் சிக்கியவர்களை மருத் துவமனையில் சந்தித்து விபத்து குறித்து கேட் டறிந்தார். தொடர்ந்து விபத்து நடந்த இடத் திற்கு அமைச்சர், ஆட்சியர், வட்டாரப் போக் குவரத்து ஆய்வாளர் நித்யா, காவல் ஆய்வா ளர் சுகவனம், வட்டாட்சியர் சரவணன் ஆகி யோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த அபாயகரமான வளைவில் வரும் காலங்களில் விபத்து நடக்காத வண்ணம்  தடுப்புகளை அமைத்து வாகனங்களின்  வேகத்தை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என  அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.மதிவேந் தன் உத்தரவிட்டார்.