பள்ளமான தரை; உடைந்த மேற்கூரை தருமபுரி, ஆக.20- வத்தல்மலையில் உள்ள ஒன்றியக்காடு கிராமத்தில் சேதமடைந்த நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளதால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி ஒன்றியம், கொண்டகர அள்ளி ஊராட் சிக்குபட்ட வத்தல்மலையில் உள்ள ஒன்றியக்காடு பகுதி யில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மலைக்கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் 15 குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வரு கின்றனர். இந்நிலையில், அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை (சிமெண்ட் சீட் அட்டை) உடைந்து காணப் படுகிறது. கட்டிடத்தின் உள்பகுதியில் தரையில் சிமெண்ட் பெயர்த்து மேடு, பள்ளமாக உள்ளது. தற் போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், கட்டிடத்திற் குள் தண்ணீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும், அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, அங்கன்வாடிக்கு புதிய கட்டி டம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.