districts

img

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இந்துத்துவ அமைப்பினர் - திவிக மனு

கோவை, ஆக.20- விநாயகர் சதுர்த்தி எனும் பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இந்துத்துவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மாநகர ஆணையாளரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு இந்துத்துவ அமைப் பினர், நீதிமன்ற ஆணைகளை கொஞ்சமும் மதிக்காமல்,  தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை களையும் காலில் போட்டு மிதித்தும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை விளைவித்தும், சிறு வியாபாரிகளை  மிரட்டி வசூல் செய்யும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது.  எனவே, நீதிமன்ற ஆணைகள், தமிழக அரசின் ஆணைகளை  அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும்  மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள்  கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். முன்னதாக, நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து செவ் வாயன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மனு  அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வடக்கு மாநகர ஆணையா ளர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் தார். தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர், இந்து  சமய அறநிலையத்துறை இணை ஆணையர், மாசு கட்டுப் பாட்டு வாரிய ஆணையர் ஆகியோரிடமும் மனு அளித்த னர்.