districts

img

துப்பாக்கிகளுடன் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி

கோவை, மார்ச் 28- கோவையில் இந்து முன்னணி நிர் வாகி ஒருவரின் வீட்டில் காவல் துறை தனிப்படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், அனுமதியின்றி வைத்தி ருந்த 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 5  தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. நாச வேலையில் ஈடுபட முயன்ற தாக தனிப்படை போலீசார் சந்தேகிக் கின்றனர். கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள புலியகுளம், மசால் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ரவி  எனும் ரவி, இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். இவரது வீட்டில் உரிய அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதனடிப்படையில் போத்தனூர்  சரக உதவி ஆணையர் சதீஷ் தலைமை யிலான தனிப்படை போலீசார், ரவி யின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட் டனர்.

இதில், ரவி யின் வீட்டிலிருந்து இரண்டு கைத்துப் பாக்கிகள், 5 தோட் டக்கள் கைப்பற்றப் பட்டன. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரவியிடம் தீவிர விசாரணையில் ஈடு பட்டனர். அப்போது ரவி, கட்டப்பஞ்சா யத்துகளில் ஈடுபட்டு வந்ததும், அதற் காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்த தும் தெரிய வந்தது. மேலும், இரண்டு கை துப்பாக்கிகள் சென்னையில் உள்ள  அவரது நண்பர்கள் மூலம் வாங்கப்பட்ட தும், எந்தவித அனுமதியும் பெறாமல் மிரட்டலுக்காக இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததும் அம்பலமானது. போத்தனூர் காவல் நிலையத்தில் வைத்து ரவியிடம் விசாரணை நடத் திய போலீசார், பின்னர் அவரை ராமநாத புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சென்னையில் யாரிடமிருந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டது? வேறு ஏதேனும் கும்பலுடன் ரவிக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக கட்டப்பஞ்சாயத்து ஒன்றில் ரவி, துப்பாக்கியால் சுட்டு ஒருவர் காய மடைந்ததாகவும், ரகசியமாக மருத்துவ ரிடம் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகி றது. காயமடைந்த நபர் யார்? சிகிச்சை அளித்த மருத்துவர் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்து முன்னனி நிர்வாகியின் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட் டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.