சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், பக்கநாடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மலைப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, பாறைகளை வெடிவைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.