districts

தேர்தல் புறக்கணிப்பு தீர்வல்ல; உதயசூரியனுக்கு வாக்களிக்க மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஏப். 9– திருப்பூர் மாவட்டம் உடுமலை  வட்டம் மலைவாழ் செட்டில் மெண்ட் பகுதிகளில் சிலர் தேர் தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். தேர்தல் புறக்கணிப்பு பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது, இந்தியா கூட்டணி  சார்பில் பொள்ளாச்சி தொகுதியில்  போட்டியிடும் திமுக வேட்பாள ருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய  வேண்டும் என்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் கே.குப் புசாமி, செயலாளர் கோ.செல்வம்,  பொருளாளர் என்.மணிகண்டன் ஆகியோர் செவ்வாயன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியீிருப்ப தாவது: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக, 20  ஆண்டு காலமாக உடுமலைப் பேட்டை திருமூர்த்தி மலை பகு திகளில் வாழும் 18 சென்டில்மென்ட் பகுதி மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். மனைப்பட்டா, நிலப்பட்டா உள் ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு  அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் முதல மைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்ற பின் நம் கோரிக்கை நிறை வேறுவதற்கு தொடர்ந்து உதவி  வருகிறார்கள். அதன்படி மலை வாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு ரிமை இல்லை என்பதை முன் வைத்து கோரிக்கை வைத்தோம்.  அதன்படி தளி பேரூராட்சியில் குரு மலை, திருமூர்த்திமலை ஆகிய இரண்டு பகுதிகளை சேர்க்க ஏற் பாடு செய்திருந்தார்கள். தேர்தலில்  மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் இரண்டு கவுன்சிலர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள் ளோம் அதில் சங்கத்தின் தலை வர் கோ.செல்வம் பேரூராட்சி உத வித் தலைவராக பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். வரலாற் றில் புலையன் இனத்தைச் சேர்ந்த  ஒருவர் இப்பொறுப்புக்கு முதல்மு றையாக வந்திருப்பது பெருமை மிகு செயலாகும். அனைத்து செட்டில்மெண்ட் பகுதிகளுக்கும் பாதை அமைக்க கோரி மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில், உடு மலைப்பேட்டையில் போராட் டம் நடத்தினோம். போராட்டத் தின் அடிப்படையில் குருமலைக்கு  பாதை அமைக்க தமிழ்நாடு அர சும், மாவட்ட ஆட்சித்தலைவரும் உத்தரவிட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதன் படி பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. 500 ஆண்டு காலமாக மலைவாழ் மக்கள் வசிக் கும் பகுதிக்கு பாதை இல்லாத  நிலையில் மகத்தான போராட் டம் நடத்தி வெற்றி பெறும் நிலை  ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதை  அமைக்கும் பணியை தடுக்கும்  நோக்கோடு உடுமலைப்பேட் டையில் இருக்கிற பிஜேபி கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக ஆளுநருக்கு மனு  அனுப்பியும், மக்களை குழப்பும்  அடிப்படையில் பேசி வருகின்ற னர். இந்நிலையில் அவர்களுக்கு உடந்தையாக உடுமலை வனத்து றையினர் செயல்பட்டு வருகின்ற னர். அனைத்து பகுதி மக்களுக் கும் பாதை வசதி கிடைக்கவும், அடிப்படையான உரிமை கிடைக்க வும் மீதமுள்ள குழிபட்டி, மாவடப்பு,  தளிஞ்சி, காட்டுப்பட்டி, கோடந் தூர், ஈசல்தட்டு மற்றும் அனைத்து செட்டில்மெண்டுகளுக்கும் பாதை வசதி கேட்டு வருகிறோம். இரு பகுதிகளுக்கு வாக்குரிமை கிடைத் தது போல, மற்ற பகுதிகளுக்கும் வாக்குரிமை கிடைக்க கோரி வருகி றோம்.

அடுத்து வரவுள்ள உள்ளாட் சித் தேர்தலிலே வாக்குரிமை வழங்குவதாக உறுதி தெரிவித்துள் ளனர். மேலும் நிலப்பட்டா, வீட்டு மனைப் பட்டா ஒருங்கிணைந்த கான்கிரீட் வீடுகள், குடிநீர், விவ சாயம் செய்ய உதவி, மருத்துவ உதவி உட்பட நம் கோரிக்கை நிறை வேற நமக்கான அரசாங்கம் ஒன்றியத் தில் அமைய வேண்டும். மக்களுக் குள்ளே குழப்பத்தை விளைவித்து மோதலை ஏற்படுத்தி மிக மோச மான ஆட்சியை ஒன்றியத்திலே கடந்த  10 ஆண்டுகளாக நடத்தி வரும் மோடி அரசை வீழ்த்துவதே இத் தேர்தலின் தலையாய கடமை.  2006ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகும் வேலைகளை தொடர்ச்சியாக மோடி அரசாங்கம் செய்து வருகிறது. ஆகவே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அனைத்து மக்களி டமும் அன்புடனும் உரிமையோ டும் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற்றிட வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் ஒருவர்கூட  வாக்களிக்காமல் இருக்கக்கூ டாது. யாருடைய வார்த்தைகளை யும் நம்பி நாம் ஏமாறாமல் நமக் கான ஆட்சியை ஒன்றியத்தில் அமைத் திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  ஆதரவு பெற்ற இந்தியா கூட்டணி வேட்பாளரை பொள்ளாச்சி நாடா ளுமன்ற தொகுதியில் வெற்றி அடையச் செய்ய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். சிலர் சொல்கிற அடிப்படையில் தேர்தலை புறக்கணிப்போம் என்பது நம்மை நாமே ஏமாற்றும் செயலாகும். அதிமுகவுக்கும், பிஜேபி கூட்டணிக்கும் அது வாய்ப்பாக அமையும் என்பதால் ஒன்றுபட்டு அனைவரும் உதயசூ ரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக் கையில் கூறியுள்ளனர்.