திருப்பூர், ஜன.23- உயர்கல்வி கற்றுப் பட்டம் பெற்றால் வெயில் படாமல் வேலை செய்யலாம். இது சாதாரண மான ஒன்றல்ல. வெயிலில் வெகுகாலம் உழைத்து வந்த மக்களின் பெருங்கனவு என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமேற்பு விழாவில் உரையாற்றினார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி 51 ஆவது பட்டமேற்பு விழா செவ்வாயன்று கல் லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், 143 பேர் முதுநிலை பட் டம் பெற்றனர். 638 பேர் இளநிலை பட்டம் பெற்ற னர். மொத்தம் 781 பேர் பட்ட பெற்றனர். முதுநி லையில் இரா.திவ்யா வேதியியல், சு.வாணி ஸ்ரீ ஆடை வடிவமைப்பில் தங்கப்பதக்கம் பெற்ற னர். இளநிலையில் சு.பிரபாகரன் தங்கப்பதக் கம் பெற்றார். இதில், கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு பட்டம் அளித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியதாவது, இவ்விழா அழைப்பி தழைப் பார்த்தவுடன் இரண்டு புதுமைகள் சட் டென்று என் கண்ணுக்குப்பட்டன. வழக்கமாகப் ‘பட்டமளிப்பு விழா’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் ‘பட்டமேற்பு விழா’ என்றிருந்தது. இரண் டும் ஒன்றுதான் என்ற போதும் பயன்படுத்தும் சொற்கள் நம் பார்வைக் கோணத்தை வெளிப்ப டுத்துகின்றன. பட்டமளிப்பு விழா என்பது வழங் குபவர் நிலையிலிருந்து உருவான சொல் லாட்சி. பட்டமேற்பு என்பது பெறுபவர் கோணத் திலிருந்து உருவாகியுள்ள சொல்லாட்சி. நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். அதன் அடிப்படையே மக்கள்தான் எல்லாவற்றையும் மக்கள் நோக்கில் இருந்து காணவேண்டும். அப் பார்வை மொழியிலும் செயல்படும் காலம் இது.
எத்தனையோ சொற்கள் இன்று மாறிவிட்டன, மாறி வருகின்றன. உடல் ஊனமுற்றோர் என்னும் சொல்லை இன்று யாரும் பயன்படுத்துவ தில்லை. மாற்றுத்திறனாளர் என்கிறோம். ‘மூன் றாம் பாலினம்’ என்று வழங்கி வந்ததைத் ‘திரு நர், திருநங்கை, திருநம்பி’ முதலிய சொற்க ளால் இன்று அழைக்கிறோம். அழைப்பவர் நோக்கிலிருந்து அழைக்கப் படுபவர் நோக் குக்கு மொழி மாறுகிறது என்பதற்கு இவை சான்று. மொழி மாறுகிறது என்றால் பார்வை மாறு கிறது. விழுமியம் மாறுகிறது என்று பொருள். மொழியில் பாலின சமத்துவம் வேண்டும் என் னும் குரல்களும் இன்று எழுந்து வருகின்றன. நம் மொழி ஆண் நோக்குக் கொண்ட மொழியாக இருக்கிறது. மனிதன் என்று சொல்கிறோம். அதற்குப் பெண்பால் கிடையாது. குடிமகன் என் கிறோம். அதற்கும் பெண்பால் கிடையாது. இவற்றை எல்லாம் பொதுப்பாலில் சொல்ல வேண்டும் என்னும் கருத்து மேலோங்கி வருகி றது. மனிதர், குடிமக்கள் எனக்குறிப்பிடும். போக்கு அதிகரித்து வருகிறது. இலக்கியத்தி லும் இந்த மாற்றத்தைக் காணலாம். பெண்கள் எத்தனை வயதானவர்களாக இருந்தாலும் அவர் களை அவள், இவள் என்று ஒருமையில் அழைக் கும் வழக்குத்தான் நிலவி வந்தது. இப்போதும் நிலவி வருகிறது. இப்போது அம்மாவுக்கும் பாட் டிக்கும் மொழியில் மரியாதை வழங்க வேண்டும் என்னும் போக்கு உருவாகி வருகிறது.
இவையெல்லாம் இன்றைய காலம் கொண்டு வந்திருக்கும் மாற்றம், அத்தகைய மாற்றத்தில் இன்னொரு வெளிப்பாடாகவே பட்ட மேற்பு விழா’ என்பதைக் காண்கிறேன். சமூகத்தை முன்னெடுத்துச்செல்லும் பணியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளர்களைத் தமிழ் சமூகம் ஒரு போதும் முதன்மை படுத்துவதில்லை. தமிழ் மொழி செம்மொழி என்றும் இரண்டாயிரம் ஆண் டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் உள்ள மொழி என்றும் பெருமை பேசுவோம். இம்மொழியைக் காலம் கடந்து கொண்டு வந்திருப்போர் எழுத்தா ளர்கள்தான் என்பதை வசதியாக மறந்துவி டுவோம். இந்நிலையில், இப்படி ஒரு கௌர வத்தை இந்தக் கல்லூரி எனக்கு வழங்கியிருப் பதற்கு எழுத்தாளர்கள் சார்பாக நன்றி. பட்ட மேற்பு விழாவில் எழுத்தாளர் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்கும் இந்தப்புதுமையும் பர வலாக வேண்டும்.
இன்று பட்டம் பெற்றிருப்பவர்களில் பலர் முதல் தலைமுறைப் பட்டதாரி என்னும் பெருமை யைப் பெறுபவர்கள். இதைப் பெருமை என்று சொல்லலாமா எனத் தெரியவில்லை. 1980களில் கல்லூரிக்குச் சென்று படித்து பட்டம் பெற்ற முதல் தலைமுறைப்பட்டதாரி நான். என் பெற் றோருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. நான் தான் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தேன் என்பதில் என்ன பெருமை இருக்கிறது? பல தலை முறையாகக் கல்வி கற்க வாய்ப்பு அமையாதது அவர்கள் குறையல்ல, நம் சமூக அமைப்பில் நேர்ந்த குறைபாடு. அதைச் சரிசெய்யும் வகையி லான நவீன கால முன்னெடுப்புகள்தான் என் னைப் பட்டதாரியாக்கின. உங்களை எல்லாம் பட் டதாரி ஆக்கியிருக்கின்றன. நம்முடைய முன் னோருக்குக் கிடைக்காத கல்வி வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அதைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் பொறுப்பு நமக்கு வந்து சேர்கிறது. முன்னோ ருக்கு மட்டுமல்ல, நம்முடன் பயின்ற பல நண்பர் களுக்குக் கிடைக்காத வாய்ப்பு இது என்றும் பார்க்க வேண்டும். பள்ளிக் கல்வி முடிப்போர் அனைவரும் உயர்கல்விக்கு, கல்லூரிப்படிப் புக்கு வந்துவிடுவதில்லை. பள்ளிப்படிப்போடு தம் கல்வியை முடித்துக்கொண்டு வேறு வேலை களுக்குச் சென்று விடுவோர் பலர். படிக்க விருப் பம் இருந்தும் உயர்கல்வியில் இடம் கிடைக் காமல் அப்படியே தங்கி விடுபவர்களும் உண்டு, பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந் தாலே நமக்கு இது புரியும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது கல்லூரிகளின் எண்ணிக்கை அதி கரித்திருக்கிறது. உயர்கல்வி கற்பது எதற்காக? உடல் உழைப்பாளர்களைக் கேட்டால் ‘நிழலில் உட்கார்ந்து செய்யும் வேலைக்குப் போகலாம்’ என்பார்கள். கொங்குப் பகுதியில் ‘நெவுலொ ணத்தி’ என்று ஒரு வழக்கு இருக்கிறது. வெயி லில் காய்ந்து வேலை செய்வோர் சற்றே ஓய்வு கிடைத்தால் நிழல் தேடி ஓடுவார்கள். ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது பழமொழி ‘வேகாத வெயில்’ என்றும் கடும் வெயிலைக் குறிப்பிடுவதுண்டு. இந்த வெயிலில் உடல் வேக வில்லை என்பதுதான் அதிசயம் என்பது பொருள். உயர்கல்வி கற்றுப் பட்டம் பெற்றால் வெயில் படாமல் வேலை செய்யலாம். இது சாதாரணமான ஒன்றல்ல. வெயிலில் வெகுகா லம் உழைத்து வந்த மக்களின் பெருங்கனவு. ஆகவே நம் சமூகத்தைப் பொருத்தவரை இன்று கல்வி சுற்றுப்பாடம் பெறுவது என்பது நல்ல வேலைக்குச் செல்வதற்குத்தான். வேலைக்குத் தான் முன்னுரிமை. பல தலைமுறையாக வேகாத வெயிலில் உழைத்துக் கிடந்த குடும்பத்திலிருந்து ஒருவர், ஒரே ஒருவர் படித்துப் பட்டம் பெற்று ஒரு வேலைக்குச் சென்றுவிட்டால் அது பெருமாற் றத்தைக் கொண்டு வந்துவிடும். முதலில் அந்தக் குடும்பத்தின் நிலை மாறிவிடும். அதே தலை முறையில் இருக்கும் இளையவர்களுக்குக் கல் வியில் ஆர்வம் வந்துவிடும். சொந்தக்காரர்கள், ஊரில் உள்ளவர்களுக்கு கல்வி பற்றிய விழிப்பு ணர்வு தோன்றும். ஒரே ஒருவர் படித்து வேலைக் குச் சென்றதால் அப்படி மாறிய கிராமங்கள் பல உண்டு. இன்று படித்துப்பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் வேலை கிடைத்துவிடாது. அதற்கு மேல் பல படிநிலைகள் இருக்கின்றன.
கல்வியைப் பற்றித் தமிழ் மரபில் பலவித மாகப் பேசியுள்ளனர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர் தத்துவம் என வியந்து பேசுவதைக் கேட்டிருப்போம். எல்லாவற்றை யும் ஊராகவும் எல்லோரையும் நண்பர்களாக வும் காணும் இந்தப்பார்வை எதன் அடிப்படை யில் வந்தது? கல்வி நோக்கில் இதைக் காணவே ண்டும். நம்முடைய ஊரிலேயே இருந்து கொண் டிருந்தால் எவற்றை எல்லாம் கற்க முடியும்? அந்த நிலப்பரப்புக்கு ஏற்பவும் அங்குள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் அளவான வற்றைத் தான் கற்க முடியும். ஊரை விட்டு வெளியே வரும்போது தான் நம் பார்வை விரிவ டையும். இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, நம் மைப் போல எத்தனையோ மக்கள் வாழ்கிறார் கள், பலவிதமான வாழ்க்கை இருக்கிறது. என்னும் உணர்வு நமக்குத் தோன்றும். எழுத்த றிவு என்பதும் அப்படித்தான். பல ஊர்களில் தொடக்கப்பள்ளி மட்டும் இருக்கும். உயர்நி லைப்பள்ளிக்கோ, மேல்நிலைப்பள்ளிக்கோ செல்ல வேண்டும் என்றால் சில கிலோ மீட்டர் பய ணம் செய்துதான் ஆக வேண்டும். உயர்கல்விக் காகக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால் தங்கிக் கற்கும் படியான வௌயூருக்குச் செல்ல வேண்டும். உணவுக்காக மனிதர் இடம் பெயர்ந் தது ஒரு காலம். வேளாண்மையைக் கண்டு பிடித்து ஒரே இடத்தில் நிலைகொண்டு வாழ ஆரம்பித்த பிறகு கல்விக்காக இடம்பெயர நேர்ந் திருக்கிறது. இதை இரண்டாம் இடப்பெயர்வு என்று சொல்லலாம். கல்வியின் முக்கியத்து வத்தை உணர்ந்திருப்பது தமிழர் மரபு. ஆகவே வேலைவாய்ப்புக்கு மட்டும் என்று கருதாமல் அதையும் உள்ளடக்கி ஓர் அறிவுத்துறையைப் பயில வேண்டும் என்னும் நோக்கில் நாம் கல்வி யைக் கற்க வேண்டும். என்று கூறினார்.