districts

img

சட்டவிரோதமாக இயங்கும் ஹலோ பிளாக் நிறுவனம்

ஈரோடு, ஜன. 29- சட்டவிரோதமாக இயங்கும் ஹலோ பிளாக் நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்தக்கோரி அந் தியூர் அருகே பொய்யேரிக்கரை யில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர்  அருகே உள்ள பொய்யேரிக்கரை யில் அரசு அனுமதி இல்லாமல், சட்டவிரோத ஹாலோபிளாக் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மின் இணைப்பை துண்டிக் கக் கோரி அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் சார் பில் திங்களன்று அந்தியூர், அண் ணாமடுவில் இருக்கும் உதவி மின்  பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது.  இதைத்தொடர்ந்து நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில், சட்ட விரோதமாக இயங்கும் ஹாலோ பிளாக் நிறுவனம் இனி இயங்கி னால், அந்த நிறுவனம் மீது நட வடிக்கை எடுத்து இயந்திரங்களை மூடி முத்திரையிடப்பட்டு காவல் துறை நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எழுத்துப்பூர் வமாக உறுதியளித்தார். இதை யடுத்து, போராட்டம் கைவிடப்பட் டது. முன்னதாக நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் தாலு காச் செயலாளர் ஏ.கே.பழனிச் சாமி தலைமை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரி முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் தாலுகாச் செயலா ளர் ஆர்.முருகேசன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசி னர். நிறைவாக, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் உரையாற்றினார். இதில், மாதர் சங்க தாலுகாச் செய லாளர் எஸ்.கீதா மற்றும் எஸ்.கரு மலைராஜன், எஸ்.சார்லஸ்ராஜா  ஆகியோர் உட்பட பொய்யேரிக் கரை பொதுமக்கள் திரளாக பங் கேற்றனர்.