உடுமலை, டிச.23- உடுமலை திருமூர்த்தி மலையில் கடந்த வாரம் கனமழை பெய்ததால், பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடைவிதிக்கபட்டி ருந்தது. தற்போது மலைப்பகுதியில் மழை இல்லாததால், சுற் றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை திருமூர்த்தி மலையில் சுற்றுலாப் பயணிகள் அரு வியில் குளிக்கும் வகையில் செயற்கையாக உருவாக்கப் பட்ட பஞ்சலிங்க அருவியில் மழை காலங்களில் திடீர் வெள் ளம் ஏற்படும். கோவில் நிர்வாகத்தின் சார்பில் மழை பெய்யும் போது சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பார்கள். கடந்த சில நாட்கள் மழையின் காரணமாக மலை அடிவாரத்தில் இருக்கும் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளை கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் மலைப்பகு தியில் மழை இல்லாததால் 11 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பய ணிகளுக்கு திங்களன்று முதல் அனுமதிக்கபட்டுள்ளது.