districts

img

தொடர் மழை - பெருக்கெடுத்த வெள்ளம்

நாமக்கல், நவ.7- பள்ளிபாளையம் அருகே தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்த னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளை யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு  தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, பள்ளி பாளையம் பிரதான சாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட  இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. அதிக அளவு நீர்  சூழ்ந்ததின் காரணமாக, பேருந்துகள், இரு சக்கர வாக னங்கள் உள்ளிட்டவை செல்ல முடியாத நிலை ஏற்பட்ட தால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், பள்ளிபாளையம் நக ராட்சி ஊழியர்கள், மற்றும் மேம்பால கட்டுமானப்பணி ஊழி யர்கள் ஆகியோர் கூட்டு முயற்சியுடன் வெள்ள நீரை வெளி யேற்றும் பணியில் ஈடுபட்டனர்.