districts

img

நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை கூடுதல் பேரிடர் மீட்பு படையினர் வருகை

உதகை, ஆக.1- நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ளது. இதனையடுத்து உத கைக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த கடந்த 2 வாரங்களாக கொட்டித் தீர்த்தது. இத னால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக் கப்பட்டது; வாகனங்கள் சேதமடைந் தன. மேலும் 500க்கும் மேற்பட்ட இடங் களில் மின் கம்பங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை 31  முதல் ஆகஸ்ட் 2 முதல் முன்று நாட்க ளுக்கு நீலகிரிக்கு மிக கனமழை பெய் யும் என இந்திய வானிலை ஆய்வு  மையம் அறிவித்து, ரெட் அலர்ட் விடுக் கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணி கள் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவு றுத்தியுள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில், ஓரு சில இடங்களில் அதி களவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும், அதிவேகமாக காற்று வீசுவ தன் காரணமாக பல இடங்களில் மரங் கள், மரக்கிளைகள் மற்றும் மின் கம்பங் கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத் தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வேறு மாவட்டங்களிலிருந்து  நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்று லாப் பயணிகள் பாதுகாப்பாக வர வேண்டும்.  இதேபோல், உதகை முதல் கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாசபாலம் என்ற இடத்தில் சாலை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வரு கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து  உதகை மற்றும் கூடலூர் வரும் கனரக  சரக்கு வாகனங்கள் குறிப்பாக அத்தியா வசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் ஒரு வாரத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டதால் அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு உதவி கமாண்டண்ட் ராஜூ தலைமையில் 30 பேர் அடங்கிய குழுவி னர் வந்துள்ளனர். இவர்களுடன் ஏற்க னவே இங்கு தங்கி உள்ள மாநில பேரிடர் மீட்பு படையினர் 80 பேர் இணைந்து  செயல்படுவார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.