திருப்பூர், ஆக.21- திருப்பூர் மாவட்டத்தில் கடும் மழை பெய்ததால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சென்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நி லையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்திருந்தது. அதன்படி திங்கள், செவ்வாய் ஆகிய நாட்க ளில் கடும் மழை பெய்தது. செவ்வா யன்று மதியம் முதல் இரவு வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிக ளிலும் கடும் மழை பெய்தது. திருப் பூர் மாநகரில் பகல் நேரத்தில் வெயில் அதிகமாகவும், மாலை நேரத்தில் மழை பொழிவும் இருந் தது. மாநகரின் ராக்கியாபாளை யம், அனுப்பர்பாளையம், பிச்சம் பாளையம், போயம்பாளையம், கொங்கு மெயின் ரோடு சந்திராபு ரம் குமார் நகர் உள்ளிட்ட பகுதிக ளில் கனமழை பெய்தது. பிஎன் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சில கடைகளுக்குள் புகுந்ததால், வணிகம் பாதிக்கப்பட் டது. மேலும் இரவு வரை சாலை யில் மழைநீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் காலேஜ் ரோடு அணைப்பாளையம் ரயில்வே சுரங்கம் வழியாக தண்ணீர் அதிக அளவில் சென்றதால், அப்பகுதியி லும் போக்குவரத்து தற்காலிக மாக தடைப்பட்டது. ஊத்துக்குளி சாலை பாளையக்காடு கோல்டன் நகர் பகுதிதைய இணைக்க கூடிய ரயில்வே சுரங்கப் பாதையில் தண் ணீர் தேங்கி நின்றதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்குளி சாலை எஸ் பெரி யபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையம் ஆதிதிரா விடர் காலனியிலும் மழைநீர் தேங் கியது. மேலும் அங்குள்ள மாற்றுத் திறனாளியான ராதாமணி என்பவ ருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் கொடுக்கப் பட்ட தொகுப்பு வீடு மழையின் கார ணமாக பலமிழந்து இடிந்து விழுந் தது. மாவட்ட நிர்வாகம் தனக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண் டும் என கோரிக்கை வைத்தார். இதேபோல் பலவஞ்சிபாளை யம் ஜெயலலிதா நகர் எதிர்புறம் உள்ள குடியிருப்பு பகுதி முழுவ தும் மழை நீரால் சூழ்ந்தது. தொடர்ந்து மாநகராட்சி அலுவ லர்கள் முன்னிலையில் குடியி ருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்த நீர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. மணியக்காரன்பாளையம் பகுதியில் வடமாநில தொழிலா ளர்கள் தங்கும் குடியிருப்பு பகு தியிலும் மழைநீர் தேங்கி நின்றது. திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் உள்ள பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப் படுத்தினர். மேலும், செவ்வாயன்று காலை நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதி 55 மி.மீ., குமார் நகரில் 65 மி.மீ., திருப்பூர் தெற்கு பகுதி பல்லடம் சாலையில் 33 மி.மீ., அவிநாசியில் 22 மி.மீ., ஊத்துக்கு ளியில் 18.90 மி.மீ. பல்லடத்தில் 1.50 மி.மீ. தாராபுரத்தில் 43 மி.மீ., மூல னூரில் 21 மி.மீ.,, உப்பாறு அணை பகுதியில் 70 மி.மீ., நல்லதங்காள் ஓடை பகுதியில் 35 மி.மீ., காங்கே யம் பகுதியில் 9.80 மி.மீ., வெள்ள கோவிலில் 3 மி.மீ., உடுமலை யில் 8.20 மி.மீ., அமராவதி அணை பகுதியில் 51 மி.மீ., மடத்துக்கு ளத்தில் 13 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 527.10 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 26.37 மி.மீ. பதிவாகியுள்ளது. இதன் கார ணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி யது. தாழ்வான குடியிருப்பு பகு திகளுக்குள் மழை நீர் சென்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செவ்வாயன்று கனமழை பெய்த நிலையில் புதனன்று பெரும்பா லான பகுதிகளில் மழை ஓய்ந்து காணப்பட்டது.