ஈரோட்டில் கனமழை பயிர்கள் சேதம்
ஈரோடு, மே 10- தாளவாடி பகுதியில் செவ்வாயன்று காலை சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக விவசாய நிலங்க ளில் வெள்ளம் தேங்கி பயிர்கள் சேதமடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரண மாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தும், டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்தடை நிலவி வரு கிறது. மேலும், மழை காரணமாக சுமார் 20 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமானதால் விவசாயிகள் சோகத் தில் உள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை 6 மணி அளவில் தாளவாடி பகுதியில் திடீரென கனமழை பெய்தது. தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகி னாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது. இதன் காரண மாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவ திக்குள்ளாகினர் . மாயாற்றில் வெள்ளப்பெருக்கு இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மாயாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். அதேநேரம் மாயாற்றை கடக்க முடியாததால் தெங்குமரஹடாவில் விளையும் வாழை, மிளகாய், கத்திரிக்காய் போன்ற விளைபொருட் களை கொண்டு வரமுடியாமல் விவசாயிகள் அவதிய டைந்துள்ளனர்.
தாளவாடியில் சிறுத்தை நடமாட்டம்
ஈரோடு, மே 10- தாளவாடியில் நடமாடி வரும் சிறுத்தையை வனத் துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். தாளவாடி வனச்சர கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் செவ்வாயன்று காலை சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (55) என்பவரின் வீட்டில் இருந்த நாயை அங்கு வந்த சிறுத்தை தாக்கியது. இதை பார்த்த காளிப்பன் சத்தம் போடவே சிறுத்தை நாயை விட்டுவிட்டு பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி கொண்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே, வனத் துறையினர் உடனடியாக சிறுத்தை நடமாட்டத்தை கண் காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.'
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்
கோவை, மே 10- கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ள னர். இதற்கிடையே, சிறை கைதி ஒருவர் செல்போன் பயன் படுத்தியதை சக கைதியான மன்சூர் என்பவர் சிறை கண் காணிப்பாளரிடம் கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக மன்சூருக்கும், மற்ற சில கைதிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மன்சூரை திங்க ளன்று எதிர் தரப்பு கைதிகள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதில், மன்சூரின் பின்தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட மற்ற கைதி கள் சிறை கண்காணிப்பாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த சிறை அதிகாரிகள், காயமடைந்த மன்சூரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக கோவை பந்தயசாலை காவல் துறையினர், சிறைக் கைதிகளான சிவக்குமார், அன்ன பாண்டி, ஷேக் முகமத், முனியாண்டி, பிரவீன் குமார் ஆகிய 5 பேர் மீது, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்நிலை ஆக்கிமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
அவிநாசி, மே 10- சேவூர் அருகே பஞ்சலிங்கம்பாளையத் தில் நீர்நிலைப் புறம்போக்கில் இருந்த ஆக்கிமிப்பு குடியிருப்புகளை திங்களன்று வருவாய்த்துறையினர் அகற்றினர். நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலைப் புறம் போக்கில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்பு கள் அகற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகு தியாக அவிநாசி வட்டம், சேவூர் அருகே பஞ்சலிங்கம்பாளையம் வருவாய்த்துறை நீர்நிலை வாரி புறம்போக்கிலிருந்த 21 குடி யிருப்புகளை அகற்றுவதற்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்ப குதி அளவீடு செய்யப்பட்டு, வட்டாட்சியர் ராகவி தலைமையிலான வருவாய்த்துறை யினர் திங்களன்று ஆம்புலன்ஸ், தீய ணைப்பு வசதி உள்ளிட்ட உரிய பாதுகாப்புக ளுடன் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்புகளை அகற்றுவது குறித்து அறிந்த மக்கள் தங்களது வீட்டு உபயோகப் பொருள்களை முன்னதாகவே அங்கிருந்து காலி செய்தனர். மேலும் குடியிருப்புகள் அகற்றப்பட்டவர்களுக்கு, ஏற்கனவே புஞ் சைதாமரைக்குளத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 1991 இல் வழங்கப்பட்ட பகுதி யில் மாற்று இடமும் வழங்கப்பட்டது. இருப் பினும் குடும்பத்தில் அதிகரித்துள்ள வாரிசுக ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலை உயர்வைக் குறைக்க நூற்பாலைகளுக்கு கோரிக்கை
திருப்பூர், மே 10- பின்னலாடை நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து ரக பருத்தி நூல்களின் விலையில், மே மாதம் உயர்த்தப்பட்ட கிலோவுக்கு ரூ.40 என்ற உயர்வை உடனடி யாக குறைக்கும்படி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வேண் டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், கோவை சைமா, திண்டுக்கல் டாஸ்மா, கோவை ஐடிஎப் ஆகிய அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் அந்தந்த அமைப்புகளின் உறுப்பினர் கள் மே மாதம் உயர்த்திய கிலோவுக்கு ரூ.40 உயர்வைக் கைவிட்டு ஏப்ரல் மாத விலையிலேயே நூல் வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிளஸ்-1 தேர்வுவை ஆர்வமுடம் எழுதிய மாணவர்கள்
திருப்பூர், மே 10- திருப்பூர் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 520 மாணவ-மாண விகளும், தனித்தேர்வர்கள் 370 பேர் என மொத்தம் 27 ஆயி ரத்து 890 பேர் பிளஸ்-1 தேர்வுவை ஆர்வமுடம் எழுதினர். தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மேல் நிலை பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு நடந்து வரு கிறது. இதில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வு கடந்த 5 ஆம் தேதி தொடங்கி வருகிற 28 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக் கான தேர்வு செவ்வாயன்று தொடங்கியது. இந்த தேர்வு வரு கிற 31 ஆம் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 91 தலைமை ஆசிரியர்க ளும், 91 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற 1606 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இது போல் 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை, காப்பி அடித்தல் உள்ளிட்டவைகளை கண்டறிய அமைக்கப் பட்டுள்ளது. 91 தேர்வு மையங்களில் 217 மேல்நிலைப்பள்ளிக ளில் பயிலும் 27 ஆயிரத்து 890 பேர் எழுதுகின்றனர்.
மின் குறைதீர் கூட்டம்
அவிநாசி, மே 10- தமிழ்நாடு மின்சார வாரி யம், அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவ லகத்தில் இன்று (மே 11) காலை 11 மணிக்கு மின் நுகர் வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மின் சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற் பார்வை பொறியாளர் கலந்து கொண்டு மின் நுகர் வோர் குறைகளை நேரில் கேட்டு அறிகிறார். இக்குறை தீர் கூட்டத்தில் மின்நுகர் வோர் கலந்து கொண்டு பயன் பெறுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற் பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சாம்பாரில் கரப்பான் பூச்சி - தனியார் உணவகத்தில் ஆய்வு
திருப்பூர், மே 10- திருப்பூரில் தனியார் உணவகத் தில் வாங்கிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த சம்பவம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கி யாபாளையத்தை சேர்ந்த கேசவன். இவர் திங்களன்று மதியம் திருப்பூர் குமரன் ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ ஓட்டலில் குடும்பத் துடன் உணவருந்த சென்றார். அப் போது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிர்ச் சியடைந்த கேசவன் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கரப் பான்பூச்சி இருந்த சாம்பாரின் மாதி ரியை சேகரித்து பரிசோதனைக்கு ஆய் வகத்துக்கு அனுப்பி வைத்தனர் இதன் முடிவுகள் வந்த பின்னர் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர். மேலும், சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பெருமாநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் 30 பவுன் தங்கநகை திருட்டு
அவிநாசி, மே 10- பெருமாநல்லூர் அருகே கூட்டுறவுநகரில் பூட்டி இருந்த வீட்டில் 30 தங்கநகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் கூட்டுறவுநகர் பகு தியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(37). இவரது மனைவி ஜெய லட்சுமி (35). இவர்கள் இருவரும் ஞாயிறன்று காலை வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென் றுள்ளனர். திங்களன்று காலை வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அலமறியில் வைத்திருந்த 30 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் கடைகளில் கெட்டுப்போன 320 கிலோ பழங்கள், 70 கிலோ சிக்கன் பறிமுதல்
தாராபுரம், மே 10- தாராபுரம் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய தீடீர் ஆய்வில் 320 கிலோ கெட்டுப்போன பழங்கள் மற்றும் 70 கிலோ சிக்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயல லிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கள் சிரஞ்சீவி, விஜயராஜன், ரகுநாதன், சண்முகம் ஆகி யோர் தாராபுரம் பேருந்து நிலையம், பொள்ளாச்சி ரோடு, அமராவதி ரவுண்டானா பகுதியில் உள்ள பழக்கடை, ஓட்டல் கள், பேக்கரிகள், சவர்மா கடைகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, பழக்கடையில் கெட்டுப்போன நிலையில் ஜூஸ் போடவும், விற்பனைக்கும் வைத்திருந்த மாம்பழம், ஆப்பிள் உள்ளிட்ட 320 கிலோ பழங்கள் கைப் பற்றப்பட்டு, ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஓட்டல்கள், சவர்மா கடைகளில் தரமற்றநிலை யில் வைத்திருந்த 70 கிலோ சிக்கனும் அழிக்கப்பட்டது. பானி பூரி கடைகளில் கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல்: மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல், மே 10- பரமத்திவேலூர் பகுதியில் வரத்து குறை வால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள் ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளை யம், மணியனூர், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, ஜேடர்பாளையம், செல்லப்பம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிட் டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மர வள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய் யப்படுகிறது. மேலும், மரவள்ளி கிழங்கு மூலம் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் சில்லரை வியாபாரிகள் கிரா மப்புறங்களுக்கு மரவள்ளிக்கிழங்கை கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங் கும் சவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மர வள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற் றும் புள்ளிகள் அடிப்படையில் சேக்கோ சர்வ் மூலம் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் சவ்வரிசி தயார் செய்யும் மில் உரிமையாளர்கள் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்ற னர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.9 ஆயிரத் துக்கு வாங்கிச் சென்றனர். தற்பொழுது சவ்வரிசி தயாரிக்கும் மில் உரிமையாளர் கள் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கிச் செல்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர். மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
கோவை, மே 10- கோவை ரத்தினபுரி அருகே செக்கான்தோட் டம் பகுதியில் வாலிபர் ஒரு வர் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடத்தார். இதுகுறித்து தக வல் அறிந்த கோவை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சட லத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்தவர் ரத்தினபுரி யைச் சேர்ந்த ஆனந்தகுமார் (32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.