கோவை, பிப்.7- கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளியன்று காலை 8 மணிக்கும் மேலாகவும், கடும் பனிமூட்டம் நிலவிய தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெள்ளி யன்று காலை கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. குறிப்பாக அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய பனி மூட்டம் காரணமாக குளிர்ச்சியான இதமான சூழல் நிலவியது. இதே போல புறநகர் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதி களில் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், அவிநாசி மற் றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இந்த பனிமூட்டம் காலை 8 மணிக்கு மேலாகவும் தொடர்ந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல் வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு இதேபோல, கடும் பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோவையில் தரை யிறங்க வேண்டிய நிலையில், பனிமூட்டம் காரணமாக நீண்ட நேரம் வானில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் விமானத் தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தில்லி யில் இருந்து வந்த விமானமும் இதே காரணத்தால் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது. கோவைக்கு வர வேண்டிய பயணிகள் அனைவரும் கொச்சியில் இறக்கப்பட்டு, அங்கிருந்து கோவைக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. காலை நேரங்களில் பனிமூட்டம் குறையும் வரை விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று விமான நிலைய அதி காரிகள் தெரிவித்தனர்.