districts

img

தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு அபாயம்

உதகை,  நவ.6- உதகை நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்ப தால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 2011  ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உதகை  நகராட்சியில் சுமார் 86 ஆயிரம் மக்கள் இருந்தனர். தற்போது  ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளனர். மேலும், உணவகங்கள்,  கடைகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர ஆண்டுக்கு சுமார் 25 லட்சம்  சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதன்படி  உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி சுமார் 32 டன் குப்பை கள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் தீட்டுக்கல் கிடங்கிற்கு  கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணியில் 123 நிரந்தர தொழிலாளர்கள், 163 தற்காலிக தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த அக்.31 ஆம் தேதியுடன் தற்காலிக  தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது.

இதனால் இருக்கும் நிரந்தர பணியாளர்களைக் கொண்டு  சுகாதார துறையினர் தூய்மை பணிகளை முடிந்த வரை  மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், நகரில் ஆங்காங்கே  மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக் கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வழக்க மாக ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் முடிந்தவுடன், அவர்களது ஒப்பந்தம் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆனால், தற்போது நிரந்தர தூய்மை பணியாளர்களை அலுவலகத்தில் வேறு பணி களுக்கு மாற்றம் செய்துவிட்டு, மொத்தமாக இருக்கும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியிடங்களை தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த பணிகளுக்கான டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிய 2 மாத  காலம் ஆகும். எனவே, அதுவரை பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்கனவே பணியில் இருந்த ஒப்பந்த பணி யாளர்களை கூடுதலாக 2 மாதத்திற்கு பணியாற்ற நகராட்சி  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் ஒரு சில தினங் களில் பணிக்கு வந்து விடுவார்கள். மேலும், தற்போது நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 22 ஆட்டோக்கள், ஒரு  லாரி மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது, என்றார்.