districts

img

ஆளுநராக இருக்க ஒரு நொடி கூட தகுதி இல்லாதவர்

கி.வீரமணி கடும் விமர்சனம் சேலம், ஜன.9- ஆளுநராக இருக்க ஒரு நொடி கூட தகுதி இல்லாதவர் ஆர்.என்.ரவி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடுமையாக சாடினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தமிழக ஆளுநர் தன் னிச்சையாக நடவடிக்கை எடுக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் அவருக்கு எந்த அதிகாரங் களும் வழங்கப்படவில்லை. தமிழக சட்ட மன்றத்தில் ஆளுநர் தனித்து உரையாற்றி யிருப்பது மற்றும் பாதியிலேயே வெளியேறி யது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் எனவும். தமிழக அரசியல் வரலாற்றில் சட்ட சபையில் ஆளுநர் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது இதுவே முதல்முறை இது  கண்ணியமற்ற செயல் எனவும் தெரிவித் தார். ஆளுநர் உரை என்பது ஆளுநர் தயாரிப் பது அல்ல. அரசு மற்றும் அரசின் அமைச்சர் கள் மூலமாக அரசு செய்ய வேண்டிய திட்டங் கள் குறித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் பட்டு அதை வாசிக்கும் உரிமை மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. இதேபோல் ஒன்றிய அரசிலும் பிரதமர் நாடாளுமன்றத்தில் உரை யாற்றுவதற்கு முன்பு அரசின் திட்டங்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் உள்ளது.

அதை குடியரசுத் தலை வர் வாசிப்பாரே தவிர குறுக்கீடு செய்ய முடி யாது. அதே போல் தான் மாநில அரசுகளிலும் ஆளுநருக்கு வாசிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இவர் கொச்சைப்படுத்தி உள் ளார். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எது வும் இல்லை, அது அரசியல் அமைப்பு சட்டத் தில் குறிப்பிடப்படவில்லை. அது மரபும் கூட,  அந்த மரபை தமிழக ஆளுநர் ரவி மீறி உள் ளார்.  திராவிட மாடல் அரசு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் உள் ளிட்ட பெயர்களை அவர் புறம் தள்ளி பேசுவது நாகரிகமானது அல்ல. மாற்றுக் கருத்து இருந் தால் தனிப்பட்ட முறையில் அரசிடம் தெரி விக்கலாம் அல்லது பேரவை தலைவரிடம் தெரிவிக்கலாமே தவிர இப்படி பேரவையை விட்டு வெளியேறுவது சரியல்ல. மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் தமிழக ஆளு நரின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது. சட்டமன்றத்தில் இது போல் நடந்து கொண்ட ஆளுநர் இதுவரை இல்லை. அவர்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கருத்து தெரிவித்தார். ரவி தமிழக ஆளுந ராக நடப்பதில்லை. அவர் ஆர்எஸ்எஸ்-கார ராக நடந்து கொள்கிறார்.

தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது அதனை சீர் குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் தூது வராக ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளை ஏற்று  தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார்.  அவர் ஒரு அரசு ஊழியர். ஆனால், அர சுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் பேசி வருவது கண்டணத்திற்குரியது. ஒன்றிய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற  வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் ஆளு நரின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் உட னடியாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தை கருத்தில் கொண்டு ஒன் றிய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும். மக்கள் நல திட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒருவர், தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஒருவர், தமிழகத்தின் ஆளுநராக இருக்க முடியாது. மக்களின் நல்ல திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் எதிராகவே செயல்படுபவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. எனவே உடனடியாக ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும், அவர் ஆளு நராக இருக்க ஒரு நொடி கூட தகுதி இல் லாதவர். ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் இல்லாத மாநில அரசுகளை ஆளுநர்களை கொண்டு அடக்க நினைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளம் தமிழகம் தெலுங்கானா மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பிரச்சனைகளை ஆளு நர்கள் மூலமாக நெருக்கடி கொடுத்து பிளவு படுத்தும் வேலையை ஒன்றிய அரசு செய்து  வருகிறது, என்றார்.