districts

ஈஷா யோகா மையத்தில் 6 பேர் காணாமல் போனதாக போலீஸ் தகவல்

சென்னை, மார்ச் 21- ஈஷா யோகா மையத்தில் பணி யாற்றிய 6 பேர் காணாமல் போயுள் ளதாக சென்னை உயர்நீதிமன்றத் தில் காவல் துறை தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குலசேகரப் பட்டியைச் சேர்ந்த விவசாயி திரு மலை. இவர் காணாமல் போன தனது  சகோதரரை மீட்டுத்தரக் கோரி உயர்நீ திமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு வில் எனது சகோதரர் கணேசன் என்ற  சுவாமி பவதத்தா என்பவர் கோவை யில் உள்ள ஈஷா யோகா மையத்தில்  கடந்த 2007ம் ஆண்டு முதல் தன்னார் வலராக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைபேசியில் அழைத்து, கணே சன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா?  என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா  யோகா மையத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாக  குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு  மார்ச் 5ஆம் தேதி ஈஷா யோகா மைய  பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தி ருப்பதாகவும் அவர் அந்த மனுவில்  குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் மீது  வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை  போலீசார் ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசா ரணை நடத்துவதாக அவர் தெரிவித் துள்ளார். எனவே இந்த வழக்கில் காவல் துறை விசாரணையை துரிதப்படுத்தி  காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுள் ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல்  வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணா மல் போனதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடை பெற்று வருவதாகவும் நீதிமன்றத் தில் குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் குறித்த  விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்ட நீதிபதி, அது தொடர் பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு விசாரணையை ஏப்ரல் 8ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தனர். தொடரும் மர்மம் ஈஷா யோகா மையத்தில் தொடர்ந்து மர்மமான முறையில்  பெண்கள் காணாமல் போவது  குறித்து தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி  உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இருப்பினும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இம்மையத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து  செல்வதால், உள்ளூர் காவல்துறை இம்மையம் குறித்து விசாரிக்கவே அச்சப்படுகிறது என்கிற குற்றச் சாட்டு புறந்தள்ள முடியாது.  இதனை நிருபிக்கும் வகையில், சமீப காலமாக பல்வேறு சம்பவங் கள் நடைபெற்றுள்ளது, மதுரை மாவட்டம், அண்ணா நகர் அருகே உள்ள பெரியார் தெருவை சேர்ந்த வர் மனோஜ் (25). இவர் தரணி பிரி யாவை 24 ஆம் தேதியன்று திரும ணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும், தேனிலவிற்காக கோவைக்கு வந்துள்ளனர். பின்னர், ஈஷா யோகா மையத்திற்கு சென்ற னர். அப்போது, ஈஷாவில் திவ்யதரி சனம் லேசர் டிஸ்பிளே நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த போது, திடீ ரென தரணி பிரியா காணாமல் போனார். திருமணமான 12 நாளில் கோவையை சுற்றி பார்க்க வந்த காதல் தம்பதியில் இளம்பெண் மாய மான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது.  இதேபோன்று, கோவை ஈஷா யோகா மையத்திற்கு  பயிற்சிக்கு வந்த அவினாசியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் காணாமல் போனதாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நி லையில், சம்பந்தப்பட்ட பெண் ஈஷா  மையத்தில் இருந்து  பதறிய டித்து சாலையில் ஓடும்  சிசிடிவி காட்சி கள் வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தியது. பின்னர் அவர், ஈஷா மையம் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.  அடுத்தடுத்து ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மர்மங் கள் வெளி உலகத்திற்கு தெரியாம லேயே உள்ளது. தற்போது, போலீஸ் தரப்பு ஆறு பேர் மாயமானது குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இப்போதாவது, இந்த  மர்மங்களுக்கு விடை கிடைக்குமா?  என்கிற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர் கள் மத்தியில் எழுந்துள்ளது.