districts

img

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசுக்கு ஒரு கடிதமாவது எழுதி உள்ளீர்களா? முத்தரசன் கேள்வி!

கோவை, ஏப்.15- மோடி கொடுத்த வாக்குறுதி களை பற்றி கேட்டால் கச்சத்தீவு பிரச்சனையை பேசுகிறார். சரி, இந்த  10 ஆண்டுகளில் கச்சத்தீவு விவகா ரம் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஒரு கடிதமாவது எழுதி  உள்ளீர்களா? என்று கேட்டாலும் பதிலில்லை என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தர சன் சாடியுள்ளார். கோவை மாவட்டம், சூலூர் கண் ணம்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் முத்தரசன் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது.  கண்ணம்பாளையம் அரச மரம் பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்ற இந்த கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது:- இந்தியாவை காப் பாற்றுவதற்காக இந்தியா கூட்ட ணிக்கு மக்கள் வாக்களிக்க வேண் டும். சுதந்திர இந்தியாவில் இது போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற் பட்டதில்லை. இரு மாநில முதல்வர் களை சிறையில் அடைத்துவிட்டு தேர் தல் நடத்தும் பாசிச ஆட்சியை பிரத மர் மோடி நடத்தி வருகிறார். பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹிட்லர் முசோலினி போன்றவர்களின் இறுதி காலகட்டம் எப்படி இருந்தது என் பதை பிரதமர் நரேந்திர மோடி எண் ணிப் பார்க்க வேண்டும். ரூ. 2 கோடி  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு  தருவதாக சொன்னது, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி  கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் செலுத் தப்படும் என்கின்ற மோடியின் கேரண்டி என்ன ஆனது?  10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி கொடுத்த வாக்குறுதிகளை பற்றி  கேட்டால் கச்சத்தீவு பிரச்சனையை பேசுகிறார். சரி, இந்த 10 ஆண்டு களில் கச்சத்தீவு விவகாரம் தொடர் பாக இலங்கை அரசுக்கு ஒரு கடித மாவது மோடி அரசு எழுதியது உண்டா? 10 ஆண்டுகள் என்ன அமைச்சர் சீதா ராமனுக்கு பேன் பார்த்துக் கொண்டி ருந்தாரா? ஹிந்தி மொழி திணிப்பு  தொடர்பாக தமிழகத்தில் நடந்த  போராட்டங்களை கொச்சைப்ப டுத்தி அண்ணாமலை விமர்சித்திருப் பது மிகவும் கீழ்த்தரமான செயல்.இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன் மையாக கண்டிக்கிறது.  நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத் தில் முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண் டரை ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சிறப்பான திட்டங்களை எடுத் துக் கூறி வாக்கு சேகரிக்கிறார். ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடியோ மக் களை திசை திருப்பும் வகையில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.  அதிமுக தேர்தலுக்குப் பிறகு இருக்காது என அண்ணாமலை பேசி வருவது அவரது அறியாமையை காட் டுகிறது. இதே போல் இந்தியாவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இருக்காது என மோடி பேசு வதும் ஜனநாயகத்துக்கு ஆரோக்கி யமானதல்ல. எதிர்க்கட்சிகளே இல் லாத சூழலை உருவாக்க பாஜக முயற் சித்து வருகிறது. இது ஒருபோதும் நிறைவேறாது. 19ஆம் தேதி நடக்க  இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட் பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.  இந்த கூட்டத்தில் கண்ணம் பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் மௌனசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் யு.கே.சிவஞானம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.