ஈரோடு, பிப். 29- ஜிஎஸ்டி தொகையை திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், வீரப் பன் சத்திரத்தில், லக்காபுரம், வீரப்பன்சத்திரம், சித்தோடு மற்றும் ஈரோடு விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், கடந்த 1.7.2017 முதல் 31.7.2018 வரை விசைத்தறி நெசவாளர்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு திரும்ப வழங்க வேண்டும். ஒன்றிய அரசு ரீபன்ட் தொகையை திரும்ப வழங்காததால் பலர் முதலீடுகளை இழந்து தொழிலை விட்டே சென்று விட்ட னர். பெரும் நெருக்கடியில் இத்தொழிலை மேற்கொண்டு வருகையில், தற்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வரு மானவரி சட்டத்திருத்தம் கடும் பாதிப்பை உரு வாக்கும். இச்சட்டத்தை ஒரு வருடத்திற்கு ஒன்றிய அரசு ஒத்தி வைக்க வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வருமான வரிச்சட்டத்திருத்த சட்டம் சிறு குறு நிறுவ னங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே அனைத்து நிறுவனங்களுக்குமான சட்டம் சமமாக அமல்படுத்த வேண்டும். காலக்கெ டுவை 90 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டது. ஆர்ப்பாட்டத்தில், வீரப்பன்சத்திரம், லக்காபுரம், சித்தோடு மற்றும் ஈரோடு விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் உள் ளிட்ட தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்ற னர்.