districts

img

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

ஈரோடு, மே 8- தேசிய கிராமப்புற வேலை உறுதி  சட்டப்படி வேலை கேட்டு அம்மா பேட்டை ஊராட்சி  ஒன்றிய அலுவல ரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்டம், அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய கிராம ப்புற வேலை உறுதி சட்டப்படி வேலை பெறும் வகையில் அடை யாள அட்டை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடந்த பல  மாதங்களாக வேலை அளிக்கப்பட வில்லை. இந்நிலையில் வேலை யின்றி, வருமானமின்றி பாதிக்கப் பட்டு வந்தனர். இதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளி மற்றும் பாது காப்பு உரிமைகளுக்கான சங்கத் தின் சார்பில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.  இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சாவித்திரி தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்று மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.வி.மாரிமுத்து மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா  செயலாளர் ஆர்.முருகேசன் ஆகி யோர் உடனிருந்தனர்.