districts

img

காவலர் உடல் தகுதித்தேர்வு கைக்குழந்தையுடன் வந்து பங்கேற்பு

கோவை, பிப்.6- குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில், தனது கைக்குழந்தையுடன் உடல்தகுதி தேர்வில் கலந்து கொண்ட பெண் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில்,  இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி,  செவ்வாயன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத் தில் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண், பெண் இருபால ரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில்,  குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில், தனது  கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு ஆவ லுடன் கலந்துகொண்டார்.